அதிராம்பட்டினம்அருகே விஷ வாயு தாக்கி துப்புறவுத் தொழிலாளர்கள் இருவர் பலி

Posted July 18, 2014 by Adiraivanavil in Labels: ,
அதிராம்பட்டினம்அருகே மல்லி பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வரும் நோயாளிகள் பயன் பாட்டிற்காக 4 கழிவறைகள் உள்ளன. இந்நிலையில் செப்டிக்டேங்கிள் அடைப்பு ஏற்பட்டதால் அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அந்த கழிவறைகளை பயன்படுத்த முடியாமல் அவதிபட்டு வந்தனர்.இதையடுத்து ஆரம்ப சுகாதாரநிலையத்தில் உள்ளசெப்டிக்டேங்கை சுத்தம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். செப்டிக்டேங்க் சுத்தம் செய்ய மல்லிப்பட்டினம் ராமர்கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் (வயது 58). என்பரை அழைத்தனர். அதன்பேரில் இரவு 11 மணியளவில் தங்கவேல், அவரது மகன் குமார் இவர்களுது உறவினர் திருவாரூர்மாவட்டம் முத்துபேட்டை   சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் ஆரம்பசுகாதார நிலையத்திற்கு சென்று அங்குள்ள செப்டிக்டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அவரது உறவினர் சுரேஷ் எதிர்பாராத விதமாக செப்டிக்டேங்கிற்குள் விழுந்தார். அதைகண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் அவரை காப்பாற்றுவதற்காக செப்டிக்டேங்கிற்குள் இறங்கி சுரேசை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.ஆனால் செப்டிக்டேங்கிற்குள் இறங்கிய அவர்கள் 2 பேரையும் விஷவாயு தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தந்தை–மகன் இருவரும் மயங்கி விழுந்து பலியானார்கள். இவர்களது உடல் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது,
படுகாயம் அடைந்த சுரேசை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து சேதுபாவசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


0 comment(s) to... “அதிராம்பட்டினம்அருகே விஷ வாயு தாக்கி துப்புறவுத் தொழிலாளர்கள் இருவர் பலி ”