பட்டுக்கோட்டையில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலைமறியல்

Posted July 28, 2014 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை மேலத் தெருவில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இங்கு செல்போன் டவர் அமைத்தால் புற்று நோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் என குற்றம் சாட்டினார்கள். இதையும் மீறி அங்கு
செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் இன்று காலை பட்டுக்கோட்டை – தஞ்சை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்த தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. செல்லப்பாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் அகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நன்றி மாலைமலர்நியூஸ் 



0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலைமறியல்”