பட்டுக்கோட்டையில் கூடுதல் நிவாரண தொகை கேட்டு மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Posted July 24, 2014 by Adiraivanavil in Labels: ,

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் மனவளர்ச்சி
குன்றி யோருக்கான சிறப்பு பள்ளிகள் மற்றும் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கான கடந்த நிதியாண்டில் வழங்க வேண்டிய உணவூட்டு மானியம், மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் சிறப்பு ஆசிரியர்களின் கடந்தாண்டில் வழங்கி இருக்க வேண்டிய தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு பள்ளி கட்டிடங்களுக்கான வாடகை உள்ளிட்ட எந்த நிதியையும் இதுவரை தராததை கண்டித்தும், அந்த தொகையை உடனே வழங்க கோரியும்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையினை எந்த அறிவிப்பும் இன்றி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கப்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிக்கும் உதவித்தொகை வழங்கிட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளாக உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருப்பிடத்திற்கு அருகில் பணியமர்த்த பட வேண்டும் என சட்ட விதிமுறைகள் இருந்தாலும் அதனை மனவளர்ச்சி குன்றியோருக்கு உயர்த்துவதாக கடந்த ஆளுனர் உரையில் அறிவித்த உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயை உடனடியாக வழங்குவதுடன், வருவாய்துறை மூலம் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளையும் மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். 40 முதல் 79 சதவீதம் வரை ஊனமுள்ளவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், 80 முதல் 100 சதவீதம் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.--------மாலைமலர் நியூஸ் நன்றி  --------


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் கூடுதல் நிவாரண தொகை கேட்டு மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்”