அதிராம்பட்டினம் கடற்பகுதியில் ஆண்மைக்குறைவை குணப்படுத்தும் பூ சங்கு மீனவர்கள் வலையில் சிக்குகின்றன

Posted July 15, 2014 by Adiraivanavil in Labels: ,

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் ஆண்மைக்குறைவை குணப்படுத்தும் பூ சங்கு மீனவர்கள் வலையில் அதிகஅளவில் சிக்குகின்றன அதிராம்பட்டினம் கடற்பகுதியில் பல்வேறு வகையான சங்குகள் மீனவர்கள் வலையில் அகப்படுகின்றன இதில் பூ சங்கு அதிக மருத்துவகுணம் கொண்டது. இந்த பூ சங்கு பார்ப்பதற்கு பூவைப் போன்றும் காலிப்ளவர் போன்றும் தோற்றத்துடன் காணப்படும் இதில் உள்பகுதியில் மரக்கலரில் சதை காணப்படும் இந்த சதை சமைத்துப்சாப்பிடுவதற்கு நல்ல ருசியாகவும்  மென்மையாவும் இருக்கும் மேலும் இது இடுப்புவலி ஆண்மைக்குறைவு வயிற்றுப்புண் கால்வலி உள்மூலம் வெளிமூலம் இரத்தமூலம் ஆகிய உஷ்ணசம்பந்தமான வியாதிகளை குணப்படுத்துகிறது என்பதால் பொதுமக்கள் இதை அதிகம் வாங்கிச்செல்கின்றனர் . இதுமட்டுமல்லாமல் இந்த சங்குகள் அழகுசாதனப்பொருட்கள் தயாரிப்பதற்கும் சுண்ணாம்பு தயாரிப்பதற்கும் இதுபயன்படுகிறது. இது கல்கத்தா மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது பற்றி மீனவர் மாரிமுத்து என்பவர் கூறுகையில் இந்த சங்கு பல்வேறு  வியாதிகளைக்குணப்படுத்தும் அற்புத மருந்தாக மட்டுமல்லாமல் சமைத்துச்சாப்பிட மிகவும் ருசியாகவும் இருக்கும் இது கடலிருந்து மூன்று பாகத்தொலைவில் அதிகமாக கிடைக்கும் இந்த சங்கு வலையில் அகப்படுவது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருக்கும் இருந்தாலும் சங்குவலையில் அகப்படுவதால் வலைபிய்ந்து வலைசேதமாகிவிடுகிறது இதனால் எங்களுக்கு  இழப்பும் ஏற்பட்டுவிடுகிறது என்றார்
 




0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடற்பகுதியில் ஆண்மைக்குறைவை குணப்படுத்தும் பூ சங்கு மீனவர்கள் வலையில் சிக்குகின்றன”