வைகுண்ட பதவி கிட்டும் ரமா ஏகாதசி விரதம்

Posted July 22, 2014 by Adiraivanavil in Labels: ,
கார்த்திகை மாதத்தேய்பிறையில் வரும் ஏகாதசி ரமா ஏகாதசி எனப்படும். அதன் மகிமை ஏராளம். முசுகுந்த சக்ரவர்த்தியின் மகள் சந்திராபாகா. அவள் கணவன் சோமன். ஒரு சமயம் சந்திரபாகா தன கணவனுடன், தந்தை வீட்டுக்கு வந்தாள். அப்போது
ஏகாதசி காலம். அரச சேவகர்கள் "இன்று ஏகாதசி. யாரும் சாப்பிடக்கூடாது. விரதம் இருக்க வேண்டும். விஷ்ணுவை வழிபட வேண்டும்" என்று முரசுகொட்டி அறிவித்தார்கள். அதைக் கேட்ட சோமன், "நான் மிகவும் பலவீனமானவன். ஒரு நாள் முழுவதும் என்னால் எப்படிச் சாப்பிடாமல் இருக்க முடியும்" என்று புலம்பினான். அவன் மனைவி சந்திரபாகா, "என் தந்தை எந்தக் குற்றத்தை வேண்டுமானாலும் மன்னிப்பார். ஆனால் ஏகாதசியன்று சாப்பிடுபவர்களை மன்னிக்கவே மாட்டார். கடுமையாகத் தண்டிப்பார் நான் என்ன செய்வேன்'' என்று அவளும் புலம்பினாள். வேறு வழியில்லாத சோமன் எதையும் சாப்பிடாமல் இருந்தான். அவன் உயிர் போய்விட்டது. துக்கம் தாங்காமல் அவன் மனைவி சந்திரபகாவும் உயிர் நீத்தாள். இருவரும் வைகுண்டத்தை அடைந்தார்கள். மறு பிறவியில் இவர்கள் இருவரும் சோமசர்மா என்பவரின் ஆலோசனைப்படி, ரமா ஏகாதசி விரதம் இருந்து, மந்திர மலைச் சாரலில் இருந்த ஒரு நகருக்கு அதிபதியானார்கள்.


0 comment(s) to... “வைகுண்ட பதவி கிட்டும் ரமா ஏகாதசி விரதம்”