அதிராம்பட்டினத்தில் அதிவீரராமபாண்டியன் மன்னன் கட்டியே அபயவரதேஸ்வரர் சுவாமி திருக்கோவில்- திருவாதிரை நட்சத்திர பரிகார ஸ்தலம் தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் வருகை

Posted July 20, 2014 by Adiraivanavil in Labels: ,
 தஞ்சைமாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்னல் அதிராம்பட்டினத்தை அதிவீரராம பாண்டியன் ஆண்டதாக வரலாறு கூறுகிறது, அதிவீரராமன் பாண்டியன் ஆண்டு வந்ததாலேயே இது அதிவீரராமபட்டினம் என்று
பெயரிடப்பட்டு, அது நாளடைவில் அதிராம்பட்டினம் ஆனது என வரலாற்று அறிஞர்கள் கூறுகிறர்கள், இந்தநிலையில் அதிவீரராம பாண்டிய மன்னர் சிவ பெருமானின் தீவிர பக்தர் இதனால், தான் வழிபடுவதற்காகவே கட்டப்பட்டது தான் அபயவரதேஸ்வரர் சுவாமி திருக்கோவில் இந்த ஆலயத்தில் ஈஸ்வரருக்கு மட்டுமல்லாமல் சுந்தரநாயகிஅம்மன,; முருகன,; தெட்ஷணமுர்த்தி, வினாயகர், ஆகியவற்றுக்கு தனித்தனி சன்னதிகளும் உண்டு இது அல்லாமல் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதியும் உண்டுள இந்த வகையில் அமையப்பெற்ற இந்த ஆலயத்துக்கு தனித் சிறப்பு உண்டு அதாவது, திருவாதிரை நட்சத்திர பரிகாரம் செய்வதற்கு உகந்த ஸ்தலம் என்பதுதான் இதனால் இந்த ஆலயத்துக்கு தமிழ்நாடு  முழுவதுமிருந்து திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வந்து வழிபட்டுச் செல்கிறார்கள், மேலும் அதிவீரராம பண்டியன் அமைச்சரவையில் அரசைப்புலவராக திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் சிறிது காலம் இருந்ததாகவும் அவருக்காக இந்த ஆலயத்தின் அருகில் மன்னர் நந்தவனம் ஒன்று அமைத்து மாணிக்கவாசகரை தங்கவைத்து சிறப்பித்ததாவும் விஷயமறிந்த பெரியோர்கள் கூறுவதோடு, அதனால் தான் இந்த ஆலயத்தில் மாணிக்கவாசகருக்கு தனி சன்னதியும் வைக்கப்பட்டுள்ளது என கூறிகிறார்கள், இந்தவகையில் இத்தகய சிறப்புமிக்க திருவாதிரை நட்சத்திர ஸ்தலமாக விளங்கி தமிழக மெங்கும் புகழ் பெற்று திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலுருந்தும் வருகை தந்து கொண்டிருக்கும் அபயவரதேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் குளத்தில் பக்தர்கள் குளித்துவிட்டு பூஜைசெய்து திருவாதிரை நட்சத்திர தோஷத்தை கழித்துவிட்டு செல்கிறார்கள், இந்த வகையில் பல விதமாக சிறப்புற்று விழங்கும் அபயவரதேஸ்வரர் சுவாமி திருக்கோவில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளதால் தஞ்சை மாவட்டத்துக்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது, 





0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் அதிவீரராமபாண்டியன் மன்னன் கட்டியே அபயவரதேஸ்வரர் சுவாமி திருக்கோவில்- திருவாதிரை நட்சத்திர பரிகார ஸ்தலம் தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் வருகை”