அதிராம்பட்டினம் மீனவர்கள் வலையில் அதிகம் சிக்கும் சங்குமுள்கள்-மீனவர்கள்அவதி

Posted June 09, 2014 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் வலையில் தற்போது அதிகளவில் சங்குமுள்கள் சிக்கி வருகிறது அவை மீனவாகள் கைகளில் குத்தி காயத்தை ஏற்படுத்துகிறது அதிராம்பட்டினம் சேற்று கடல் பகுதியில் சங்குமுள் அதிகமாக உள்ளது கடலுக்கு அடியில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகிறது இது ஒரு சங்கு இனத்தை சேர்ந்தது தற்போது அதிராம்பட்டினம் கடலில் நீரோட்டத்தால் கடலுக்கு அடியில் உள்ள சங்குமுள்கள் அலையின் வேகத்தை தாக்கம் பிடிக்க முடியாமல் மேல்நோக்கி வருகிறது அப்போது மீனவர்கள் மீன் பிடிக்க கடலில் வலையை விரிக்கும் போது சங்குமுள்கள் சிக்குகின்றன வலையில் சிக்கிய சங்குமுள்களை எளிதில் அகற்ற முடியாது சிரமப்பட்டு கவனத்துடன் அகற்ற வேண்டும் அப்படியும் மீனவர்கள் கையை காயப்படுத்திவிடும் இந்த சங்குமுள் இறால் பிடிக்கும் வலைகளில் அதிகம் சிக்குகிறது இந்த சங்குமுள் எதற்கும் பயன் இல்லாத காரணத்தால் வலையில் இருந்து எடுக்கும் சங்குமுள்களை கடற்கரையோரத்தில் குவித்து வைத்துள்ளனர் இதுபற்றி மீனவர்கள் கூறுகையில் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் சங்குமுள்கள் கூட்டம்கூட்டமகாவாழ்ந்து வருகிறது மீனவாகள் மீன்படிக்க சங்குமுள் அதிகமாக உள்ள பகுதியில் வலையை விரித்தால் அவற்றைத திரும்பி எடுக்க முடியாது 3கடல்பாகத்தில் இருந்து 5கடல்பாகம் வரை சேறுநிறைந்த பகுதிகளில் சங்குமுள் அதிகமாக வாழ்ந்து வருகிறது சங்குமுள்கள் இருக்கும் பகுதி மீனவர்களுக்கு தெரியும் வலையை விரிக்கமாட்டார்கள் தற்போது காற்று வேகமாக வீசுவதால் சங்குமுள் தங்களது இருப்பிடத்தை விட்டு மற்ற பகுதிகளுக்கு செல்கிறது அப்போது மீனவர்கள் விரிக்கும் வலையில் சிக்கி விடுகிறது விஷத்தன்மை கொண்ட சங்குமுள் உடலில் குத்தினால் கடுமையான வலி ஏற்பட்டு புண்ணாகிவிடும் மிகவும் கவனமாக வலையில்;இருந்து அவற்றை எடுக்க வேண்டும் என்றார்கள் 



0 comment(s) to... “அதிராம்பட்டினம் மீனவர்கள் வலையில் அதிகம் சிக்கும் சங்குமுள்கள்-மீனவர்கள்அவதி”