அதிராம்பட்டினத்தில் தீராத காய்ச்சலை தீர்க்கும் தில்லை நண்டுகள்-தில்லைமர வேர்களின் பால் வகையை உணவாக உட்கொள்கிறது தில்லைநண்டு

Posted June 23, 2014 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் கடற்பகுதிகளில் தில்லைநண்டுகள் அதிகம் கிடைக்கின்றன அதாவது தில்லைநண்டுகள் சேற்றுப்பகுதியில் உற்பத்தியாகக்கூடியது. அதிராம்பட்டினம் கடற்பகுதியான தம்பிக்கோட்டை மறவக்காட அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஆகிய கடற்கரைப்பகுதியில் சேற்றுப்பகுதியாக உள்ளதால் இந்தப்பகுதிகளில் தில்லைநண்டுகள் அதிகம் கிடைக்கின்றன மேலும் இந்த வகை நண்டுகள் தில்லை மரங்கள் உள்ள பகுதிகளில் சேற்றில் பொந்து அடித்து வாழக்கூடியது இந்த பொந்து சுமார் 3 அடி துரம் ஆள முள்ளதாக இருக்கும். ஒவ்வொரு பொந்திலும் குறைந்தது 3 நண்டுகளிலிருந்து 5 நண்டுகள் வரை இருக்கும். இந்த பொந்துகளிலேயே இனப்பெருக்கம் செய்தும் வருகிறது இது தில்லை மரவேர்களில் உள்ள பால் போன்ற வெண்மை நிற திரவத்தையே உணவாக உட்கொண்டு வருகிறது தில்லை மரங்களின் வேர்ப்பகுதியில் இந்த வகை நண்டுகள் வாழ்வதால் இதை தில்லை நண்டுகள் என அழைக்கிறார்கள். இது ஒவ்வொன்றும் அதிகபட்சம் 100 கிராம் எடை உள்ளதாக இருக்கும். இந்த தில்லைநண்டுகளை பிடிக்க தனி மீனவர்கள் உண்டு பொந்தில் இந்த நண்டு இருப்பதால் கையை விட்டுதான் பிடிப்பார்கள் இதற்கு நல்ல அனுபவம் வேண்டும் காரணம் பொந்தில் நண்டு மட்டுமல்லாமல் பாம்பும் இருக்கும் இதனால் கவனமுடன் பிடிக்க வேண்டியிருக்கும் இந்த நண்டு பிடிக்கும் தொழிலை ஒரு சிலர் பாரம்பரிய தொழிலாக செய்து வருகிறார்கள் இதுபற்றி மீனவர் மாரிமுத்தான் என்பவர் கூறுகையில் அதிராம்பட்டினம் கடல்பகுதிய ஒட்டி சதுப்பு நிலப்பகுதியில் தில்லை நண்டுகள் அதிக அளவில் பொந்து அடித்து கொண்டு வாழ்ந்து வருகிறது மேலும் இந்தவகை நண்டுகள் மருத்துவகுணம் கொண்டது. இதை ரசம் வைத்துச்சாப்பிட்டால் முதுகுவலி மூட்டுவலி வயிற்றுப்புண் தீராத காய்ச்சல் பித்தம் சம்ந்தப்பட்ட வியாதிகள் ஆகிய வியாதிகள் குணமாகும் இதனால் இதை கிராமப்பகுதிகளில் உள்ளவர்கள் மருந்துக்காக அதிகம் வாங்கிச்செல்கிறார்கள் இது மழைகாலங்களில் அதிகம் கிடைக்கின்றன வெயில் காலங்களில் சேற்றுமண் இறுகி காணப்படுவதால் கடல் ஓர வாய்க்கால்களுக்குச் சென்று விடும் தற்போது அதிராம்பட்டினம் பகுதிகளில் ஓரளவு மழை பெய்து மண் ஈரமாக உள்ளதால் தற்போது தில்லை நண்டுகள் அதிகம் கிடைக்கின்றன என்றார்


0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் தீராத காய்ச்சலை தீர்க்கும் தில்லை நண்டுகள்-தில்லைமர வேர்களின் பால் வகையை உணவாக உட்கொள்கிறது தில்லைநண்டு ”