குற்றாலத்தில் மெயின் அருவி,ஐந்து பக்கங்ளிலும் கொட்டும் ஜந்தருவி,புலி அருவி,சிற்றருவி,பழையகுற்றால அருவி,செண்பகாதேவி அருவி,தேனருவி என ஏழுவகையான அருவிகள்

Posted June 02, 2014 by Adiraivanavil in







குற்றாலத்தின் சிறப்புகளை ஒரே வரியில் சொல்லிவிட்டார் திரிகூடராசப்பக்கவிராயர். அப்படிப்பட்ட குற்றாலத்தில் மெயின் அருவி,ஐந்து பக்கங்ளிலும் கொட்டும் ஜந்தருவி,புலி அருவி,சிற்றருவி,பழையகுற்றால அருவி,செண்பகாதேவி அருவி,தேனருவி என ஏழுவகையான அருவிகள் ஒரே குற்றாலம் மலையிலிருந்து கொட்டும் அருவிகளின் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் காணமுடியாதபடி இயற்கை அன்னை பெருங்கொடையாக நெல்லை மாவட்டத்தின் தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் பக்கம் கொடுத்திருக்கிறார்
சுமார் மூன்றரை மாதங்கள் வரை நீடிக்கும் சாரல் மழை சீசனில் மலையில் உள்ள மூலிகைச் செடிகள் உயிர்பெற்று துளிர்த்துவிடும். அந்த மூலிகைச் செடிகளின் வழியே வழிந்தோடி அருவியாய் கொட்டும் தண்ணீரில் குளித்தால் சரும நோய்கள் தீருவதோடு தலைவலியும் குணமாகும் தன்மைகொண்டது.

                    ஒருசமயம் இங்கே கோவிலாய் குடிகொண்டிருக்கும் சிவபெருமானான குற்றால நாதருக்கு கடுமையான தலைவலி கண்டதாம். அப்போது அவரை தரிசிக்க வந்த அகத்திய முனிவர் மூலிகை குணங்களைக் கொண்ட குற்றால அருவி நீரை அபிஷேகம் செய்ய தலைவலி தீர்ந்ததாம்.

                  குற்றாலக் கவிராயரின் இலக்கியம் அதனை சுட்டிக்காட்டுகிறது. மேலும் அருவிகளில் குளிப்பதால் மூலிகைகளின் குணங்கள் மூளை பாதிப்பால் மன நலம் குன்றியவர்களையும் குணமாக்குகிறது.   அதன் காரணமாகவே இங்கு மனநல வைத்தியசாலைகளில் பலர் தங்கி அருவிக்குளியல் நடத்துவது தொடர்ந்த வண்ணமாக இருக்கிறது


1 comment(s) to... “குற்றாலத்தில் மெயின் அருவி,ஐந்து பக்கங்ளிலும் கொட்டும் ஜந்தருவி,புலி அருவி,சிற்றருவி,பழையகுற்றால அருவி,செண்பகாதேவி அருவி,தேனருவி என ஏழுவகையான அருவிகள் ”