அதிராம்பட்டினம் கடற்பகுதியில் அழிந்து வரும் அலையாத்தி காடுகளால் கடல் வளம் பாதிப்பு-சுனாமியில் மக்களை காப்பாற்றிய அலையாத்திக்காடு

Posted June 14, 2014 by Adiraivanavil in Labels:
தஞ்சை கடற்பகுதிகளில் அழிந்து வரும் அலையாத்தி காடுகள் நாகை திருவாரூர் தஞ்சை மாவட்ட கடற்பகுதிகளில் அரணாக இருந்து கடல் பகுதிகளை காத்துக்கொண்டிருக்கும் அலையாத்திக்காடுகள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது ஆசியக்கண்டத்திலேயே அலையாத்தி காடுகள் உள்ளன ஒரே பகுதி தமிழ்நாடுதான் என்பது மிகச்சந்தோஷப்பட வேண்டிய விஷயம் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி இந்தோனேசியா உள்ளிட்ட பகுதிகளை உலுக்கி பல உயிர்களை பலி வாங்கிய சுனாமி தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட கடல் பகுதிகளை நெருங்காமல் மக்களை காப்பாற்றியது அலையாத்தி காடுகள் தான் அந்த அளவுக்கு மக்களை காப்பாற்றும் சக்தி உடைய இந்த அலையாத்திக்காடுகள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது மிகுந்த வேதனைக்குறியதாக உள்ளது மேலும் அலையாத்தி காடுகள் அழிந்து வருவதால் கடல் வளமும் பாதிக்கப்படுகிறது என்பது மறக்க முடியாத ஒன்றாகும் இறால் நண்டு மீன் ஆகியவை இனப்பெருக்கம் செய்ய அலையாத்தி மரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது நல்ல தண்ணீரும் உப்புத்தண்ணீரும் சேரும் இடங்களில் அலையாத்திக்காடுகள் உள்ளதால் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய அலையாத்தி மரங்களின் வேர் பகுதிகளை நாடி வருகிறது இப்படி இருக்கையில் தற்போது அலையாத்தி மரங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளது இதற்கு முக்கிய காரணம் கடலில் மழைநீர் மற்றும் நல்ல தண்ணீர் கலந்து வந்த நிலைமாறி தற்போது கெமிக்கல் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கலந்து வருவதுதான் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள் ஒரு காலத்தில் தஞ்சை கடல் பகுதியில் கொடிகட்டி பறந்த மீன்பிடித்தொழில் தற்போது நழிவடைந்து விடட்தற்கு முக்கிய காரணம் கடல்வளம் குறைந்ததனால் தான் கடல் வளம் கூடவேண்டும் என்றால் அலையாத்திக்காடுகளைப் பராமரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் இது பற்றி கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் டாக்டர் பாலாஐp கூறுகையில் கடலில் மீன் உற்பத்திக்கு அலையாத்தி மரங்கள் முக்கிய பங்குவகிக்கிறது அலையாத்தி இலைகள் மக்கி கடலில் கலப்பதால் கடலில் உள்ள உயிரினங்களுக்கு இது உணவாகப்பயன்படுகிறது குறிப்பாக இறால் மற்றும் நண்டுவகைகள் அலையாத்திக்காடுகள் உள்ள பகுதிகளில் உற்பத்தி அதிகம் இருக்கும் இதனால் தான் அதிராம்பட்டினம் கடல்பகுதியில் இறால் அதிகம் கிடைக்கிறது என்றார் .

தத்துருபமாக எடுக்கப்பட்ட புகைப்படம்.






0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடற்பகுதியில் அழிந்து வரும் அலையாத்தி காடுகளால் கடல் வளம் பாதிப்பு-சுனாமியில் மக்களை காப்பாற்றிய அலையாத்திக்காடு”