அதிராம்பட்டினம் கடல்பகுதியில் மீனவர்கள் வலையில் மருத்துவகுணம் கொண்ட கனவாய் மீன்கள்

Posted June 04, 2014 by Adiraivanavil in Labels:


அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவகுணம் கொண்ட கனவாய் மீன்கள் மீனவர்கள் வலையில் அதிகம் அகப்படுகின்றன. பொதுவாக கனவாய் மீன்களில் 10க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இதில் ஓட்டுக்கனவாய் ஈக்கன்கனவாய் சங்குக்கனவாய் ஆகிய மூன்று வகை கனவாய்மீன்கள் மட்டும் தஞ்சை கடற்பகுதியில் கிடைக்கிறது.இதுமழை காலங்களில் அதாவது குளிர்காலங்களில் மட்டும்தான் இனப்பெருக்கம் செய்கின்றன.இந்தநிலையில் கடந்த 1மாதகாலமாக கடல் பகுதியில் தொடர்ந்து பனி பொழிவு பெய்து வருகிறது இதானல் கடல் குளிர்ந்த நிலையில் காணப்படுவதால் கனவாய் மீன்கள் உற்பத்தியாகி தற்போது மீனவர்கள் வலையில் அதிகம் அகப்படுகின்றன.இதுபற்றி மீனவர் மாரிமுத்து என்பவர் கூறுகையில் கனவாய் மீன்கள் தற்போது அதிராம்பட்டினம் கடல்பகுதியில் அதிகம் அகப்படுகின்றன. இந்த கனவாய் மீன்கள் சிங்கப்பூர்.மலேசியா.குவைத் போன்ற நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் இது மருத்துவகுணம் கொண்டது என்பதால் உள்ளுர் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகின்றன இது இரும்புசத்து.கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் மூட்டுவலி.இடுப்புவலி.மூலநோய் போன்ற உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்களைக்குணப்படுத்தக்கூடியது. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர் இதில் ஒட்டுக்கனவாய் அதிகபட்சமாக மூன்றரைக்கிலோ வரை எடை உள்ளதாக இருக்கும் இது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூபாய் 300வரை விற்பனையாகிறது சின்னவகைகனவாய் மீன்கள் கிலோ ஒன்றுக்கு 120 லிருந்து 150 ரூபாய் வரை விற்பனையாகிறது என்றார்.  a


1 comment(s) to... “அதிராம்பட்டினம் கடல்பகுதியில் மீனவர்கள் வலையில் மருத்துவகுணம் கொண்ட கனவாய் மீன்கள் ”