சூரியனார்கோவிலில் குருபெயர்ச்சி விழா 13–ந்தேதி நடக்கிறது

Posted June 10, 2014 by Adiraivanavil in
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான சிவசூரிய பெருமான் கோவில் உள்ளது. நவக்கிரகங்களுக்கென்றே அமைந்துள்ள இங்கு உஷாதேவி, சாயாதேவி ஆகிய இருதேவியர்களுடன் சிவ சூரியபெருமான் முதன்மையானவராக அருள்பாலிக்கிறார்.
இவரது சன்னதியின் எதிரே குருபகவான் மற்றும் சன்னதியை சுற்றி மற்ற நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அவரவர்களுக்குரிய வாகனத்துடன் காட்சி தருகின்றனர். சிறப்புமிக்க இந்த கோவிலில் மூலவர் சூரியபெருமானை பார்த்தவாறு குருபகவான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
இங்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். அதேபோல இந்த ஆண்டும் வருகிற 13-ந் தேதி(வெள்ளிக்கிழமை) குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இதனையொட்டி திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் அருளாணையின்படி குருபகவானுக்கு சிறப்பு பரிகார, ஹோம, அபிஷேக அர்ச்சனைகள் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


0 comment(s) to... “சூரியனார்கோவிலில் குருபெயர்ச்சி விழா 13–ந்தேதி நடக்கிறது”