அதிரையில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு திடீர் பிரசவம்
Posted June 16, 2014 by Adiraivanavil in Labels: adirai
அதிரையில் மனநலம் பாதிப்படைந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக அதிரை பகுதிகளில் சுற்றி திரிந்தார். கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். நேற்று அரசு உயர் நிலை பள்ளி எதிரே அமைந்துள்ள நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான பயணியர் தங்கும் விடுதியின் புதிய கட்டிடத்தில் மனநிலை பாதித்த பெண் பலத்த சப்தத்துடன் அழுதுகொண்டு இருந்துள்ளார். அழும் குரலை கேட்ட ( 1 ம் நம்பர் ) அரசு உயர்நிலை பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் கரோலின் , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ( 2 ம் நம்பர் ) ஆசிரியைகள் அருள் ஜோதி, சுப்பு லட்சுமி சத்துணவு பொறுப்பாளர் கிளாரா, ஜீவா ஆகியோர் விரைந்து சென்று வலியால் துடித்து கொண்டிருக்கும் மனநிலை பாதித்த பெண்ணுக்கு முதலுதவி செய்துள்ளனர். பிரசவ வலியால் துடிப்பதை அறிந்து கொண்ட இவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ செவிலியர்கள் வள்ளி மற்றும் அதிரை செட்டிதோப்பு காலனியை சேர்ந்த செவிலியர் சுகன்யா ஆகியோர் பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை சத்து குறைந்தும், எடை குறைவாகவும் காணப்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மனநிலை பாதித்த பெண் மற்றும் அவரது குழந்தை அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comment(s) to... “அதிரையில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு திடீர் பிரசவம் ”