தஞ்சை கடற்கரை பகுதியில் ஆபரேசன் ஆம்லா

Posted June 26, 2014 by Adiraivanavil in
தஞ்சை மாவட்ட கடற்ப்பகுதியில் டி.ஐ.ஜி சஞ்சய்குமார் மேற்ப்பார்வையிலும் எஸ்.பி தர்மராஜன் தலைமையிலும் போலீசார் ஆப்ரேசன் ஆம்லாவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தம்பிக்கோட்டையிலிருந்து கட்டுமாவடி வரை 45 கிலோ மீட்டர் தூரம் கொண்டகடல் பகுதியை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மீனவ கிராமங்கள் மீன் இறங்கும் தளங்கள் போன்ற பகுதிகளில் கூடுதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தம்பிக்கோட்டை இராஜமடம் பிள்ளையார்திடல் இரண்டம்புளிகாடு விளங்குளம் போன்ற சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.அதிராம்பட்டினம் துறைமுகங்களில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.மீனவர்அடையாள அட்டை படகுக்கு உரிய ஆவனங்கள் உள்ளதா என்று தணிக்கை செய்தனர்.இரவு பகலாக கடலில் 10க்கு மேற்ப்பட்ட படகில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலைகளில் அதிராம்பட்டினத்திலிருந்து கட்டுமாவடி வரை போலீசார் இரண்டு சக்கர வானத்திலும் நான்கு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். வழிபாட்டு தலங்கள் சுற்றுலா தலங்கள் வாட்ச் டவர் போன்ற பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆம்லா ஆப்ரேசனில் கடலோர பாதுகாப்பு குழமத்தோடு சட்டஒழுங்கு போலீசார்.கீயூ பிரிவு போலீசார் மத்திய உளவுதுறை போலீசார் மற்றும் மீன்துறை போன்ற துறைகள் ஈடுபட்டு வருகின்றனர்.


0 comment(s) to... “ தஞ்சை கடற்கரை பகுதியில் ஆபரேசன் ஆம்லா”