திருப்பதியில் தரிசனத்துக்கு பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

Posted June 07, 2014 by Adiraivanavil in
7–
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலை மோதியது.
ஆந்திராவில் கோடை விடுமுறை முடியாததாலும், இன்றும், நாளையும் வார விடுமுறை நாள் என்பதாலும் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் திருப்பதியில் குவிந்தனர்.
நேற்று காலை முதல் மாலை வரை 33,556 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன் பின்னரும் தர்ம தரிசன வரிசையில் 31 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்தது. இவர்களுக்கு தரிசனத்துக்கு 30 மணி நேரம் ஆனது.
ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி வழியாக கால்நடையாக வந்த பக்தர்கள் தரிசனம் செய்ய 12 மணி நேரம் பிடித்தது. 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்களுக்கு தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்து நின்றனர்.
இது தவிர லக்கேஜ் கவுண்டர், லட்டு கவுண்டர், தலைமுடி காணிக்கை இடங்களில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போதிய அரசு பஸ்கள் இல்லாததால் ஆட்டோ, வாடகை காருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.
அவர்கள் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி வசூலித்தனர். இதனால் பக்தர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.


0 comment(s) to... “திருப்பதியில் தரிசனத்துக்கு பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு”