அதிராம்பட்டினம் கடலில் அம்மன் சிலை கண்டெடுப்பு

Posted June 28, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் கடல் வாய்க்கால் பகுதியில் உப்பளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் வழியாக நேற்று காலை ஆனந்த் என்ற மீனவர் கடலுக்கு சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த வாய்க்காலில் ஒரு சாக்கு மூட்டை தென்படுவதை பார்த்து அந்த சாக்கை எடுத்து பிரித்து பார்த்தார் அப்போது அந்த சாக்கு  மூட்டைக்குள் ஒரு அம்மன் சிலையும் அம்மனுக்கு சாத்தப்படும் பட்டுதுணிகளும் இருந்ததை கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.இது பற்றி மீனவர் ஆனந்த் அதிராம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எஸ். பசுபதி கிராம அதிகாரி மகரஜோதி ஆகியோர் அங்குவந்து சிலையை கைப்பற்றினர். பின்னர் அந்த சிலை பட்டுக்கோட்டை தாலுக்கா ஆபீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கே எப்படி இந்தசிலை வந்தது எங்கே திருடப்பட்டது ஏன் இங்கு கொண்டு வந்து போடப்பட்டது  என்பது பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.




0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடலில் அம்மன் சிலை கண்டெடுப்பு ”