அதிரை ஈ.சி.ஆர் சாலை காதிர் முகைதீன் பள்ளி அருகே இரு சக்கர வாகணத்தில் வந்துகொண்டிருந்த அதிரை கரையூர் தெருவை சேர்ந்த ரமேஷ் (தமிழன் டிவி செய்தியாளர்) என்ற நபர் மீது கேரளாவை சேர்ந்த மினி பஸ் பயங்கரமாக மோதியது.

பட்டுக்கோட்டை மேலத் தெருவில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இங்கு செல்போன் டவர் அமைத்தால் புற்று நோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் என குற்றம் சாட்டினார்கள். இதையும் மீறி அங்கு

ஈத் துவக்கும் இன்பப்பெருநாளான ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டது.நோன்பிருந்து அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்ததன் மூலம், அவனிடம் இருந்து
கருணையைப் பரிசாகப் பெற்றுக் கொண்டோம்.

 அதிராம்பட்டினம் சுப்பராமணியன்கோவில்தெரு அருள்மிகு ஸ்ரீ திருமையாசுவாமி  ஆடிகடைவெள்ளி  36-ஆம் ஆண்டு திருவிழா பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது

அதிராம்பட்டினம் அருகே ஆடி அம்மாவசை முன்னிட்டு மல்லிப்பட்டினம் கல்லிவயல்தோட்டம் கடற்பகுதியில் நீராடும் பக்தர்கள்-படங்கள் இணைப்பு-


 அதிரை ரோட்டரி கிளப் சார்பாக இஃப்தார் விருந்து நடைபெற்றது சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுனர் பாலசுப்பிரமணியன் மற்றும் துணை ஆளுனர் பத்மானந்தன் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் அன்புமொழி மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் நகர அ.இ.அ.தி.மு.க.நகர

கண்டங்கத்திரி தாவரத்தின் அறிவியல் பெயர் சொலேனம் சுரட்டேனஸ் பர்ம். இது ஒரு மருந்து வகை தாவரம். இந்த தாவரம் முழுவதும் முட்களாக காணப்படும், மலர்கள் கொத்தாக இருக்கும், கனிகள் கோள வடிவத்தில் இருக்கும், விதைகள் தட்டையானவை. இதன் இலைகளின் சாற்றை மிளகுடன் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்து மூட்டு வலிக்கு மருந்தாக பயன்படுகிறது.

கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. பலர் கர்ப்பகாலங்களில்

 பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விடயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி யும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும்

கண்ணை இமை காப்பது போல பிள்ளைகளைக் காப்பது தான் அம்மாவின் வேலை.. ஆனால் இங்கே உள்ள அம்மாப் பறவை தன் பிள்ளைகளை இறகுகளுக்குள் எவ்வளவு


பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் மனவளர்ச்சி

உணவில் உப்பு பயன்படுத்துவதைக் குறைத்தால் அது பல்வேறு உடல் பிரச்னைகளை ஏற்படுத்தி இறுதியில் இருதய நோயை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பொதுவாக உப்பை அதிகம் உட்கொண்டால் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி

அதிராம்பட்டினத்தில் பழய பேர்ஸ்டாபிஸ் ரோடு அல் அமீன் பள்ளி அருகில் ; கம்பி தீப்பற்றி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின' வாரிய ஊழியர்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறார்கள்.

கார்த்திகை மாதத்தேய்பிறையில் வரும் ஏகாதசி ரமா ஏகாதசி எனப்படும். அதன் மகிமை ஏராளம். முசுகுந்த சக்ரவர்த்தியின் மகள் சந்திராபாகா. அவள் கணவன் சோமன். ஒரு சமயம் சந்திரபாகா தன கணவனுடன், தந்தை வீட்டுக்கு வந்தாள். அப்போது

அன்பிற்குறிய வாசகர்களே...
அதிரை நியூஸ் வேல்டு என இயங்கி வந்த நமது இணையதளம் சில சகோதர இணையதளத்தின் உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று நமது இணையதளத்தின் பெயரை அதிரை வானவில் என மாற்றி உள்ளோம் வாசகர்கள் தொடர்ந்து நல் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
                                                         இப்படிக்கு...
                                                         நிர்வாகம் -
                                                         அதிரை வானவில்

தஞ்சை மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலப்பிரிவும், இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கமும் இணைந்து குழந்தைகளுக்கான அதிநவீன சிகிச்சை குறித்த பயிற்சி முகாமை நடத்தின.
தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில் உள்ள

 தஞ்சைமாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்னல் அதிராம்பட்டினத்தை அதிவீரராம பாண்டியன் ஆண்டதாக வரலாறு கூறுகிறது, அதிவீரராமன் பாண்டியன் ஆண்டு வந்ததாலேயே இது அதிவீரராமபட்டினம் என்று


 அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தற்போது இறால் கருவாடுகள் ஏற்றுமதி தீவிரம் அடைந்துள்ளது. அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் கருவாடுகள் உலர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கோழித்தீவனங்களுக்குப் பயன்படும் சங்காயம்.மற்றும் மீன் கருவாடுகள் மட்டுமல்லாமல் இறால் கருவாடுகளும் உலர்த்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் பொதுவாக வெள்ளை இறால் மற்றும் கருப்பு இறால்கள் அதிகம் கிடைக்கின்றன. இதில் பெரிய வகை இறால்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் வாழும் மக்கள் இறால் கருவாடுகளை அதிகம் விரும்பிச்சாப்பிடுவதால் இறால் கருவாடுகளுக்கு வெளிநாடுகளில் தேவை அதிகரித்துள்ளது.இதையேட்டி இறால் கருவாடுகளின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது தற்போது இறால் வரத்து அதிகரித்துள்ள நிலையிலும் வெயில் தொடர்ந்து அடித்து வருவதாலும் இறால் கருவாடுகளை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது. இதுபற்றி மீனவர் மாரிமுத்தான் கூறுகையில் இறால் கருவாடுகள் நீண்ட வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் பரவி வந்த பிளேக் நோயைத்தொடர்ந்து வெளிநாடுகள் இதற்கு தடைவிதித்தது இதனால் இறால் கருவாடுகள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. இதனால் இறால் கருவாடுகள் உற்பத்தியும் குறைந்து உள்ளுர்களில் மட்டுமே விற்கப்பட்டுவந்தது. வெளிநாடுகளில் தடைநீக்கப்பட்டும் தொடர்ந்து இறால் கருவாடுகள் ஏற்றுமதி மந்தமாகவே இருந்துவந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இறால் கருவாடுகள் ஏற்றுமதி தீவிரம் அடைந்துள்ளது. சிங்கப்பூர்,மலேசியா,சவுதி,துபாய்,உள்ளிட்ட அரபு நாடுகளில் இறால் கருவாடுகளின் தேவை அதிகம் உள்ளதால் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார்  -அதிரை நியூஸ் வேல்டு-



ஒவ்வொருவருமே ஏராளமான வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவித்து வருகிறோம். கண்ணுக்குத் தெரியாமல் நம்மைப்படுத்தும் துயரம் வேதனை எனப்படும். கண்ணுக்குத் தெரிந்தே நம்மைத் துயரங்களில் ஆழ்த்துபவை சோதனை எனப்படும். வேதனைகளையும், சோதனைகளையும் ஒட்டுமொத்தமாக நீக்கும் ஏகாதசி இது. அதுமட்டுமில்லாமல் கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், தானங்கள் முதலியவற்றால் உண்டாகும் பலன்களையும் இந்த ஏகாதசியே கொடுக்கும். விதிமுறை தெரியாமலோ அல்லது பெருமைக்காகவோ இந்த விரதம் இருந்தாலும், மேற்சொன்ன பலன்கள் எல்லாம் தரக்கூடியது இந்த ஏகாதசி. ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி எனப்படும். பாவங்களை நீக்கும் அங்குசமாக இது இருப்பதால் பாபாங்குசா எனப்பட்டது.

அதிராம்பட்டினம்அருகே மல்லி பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வரும் நோயாளிகள் பயன் பாட்டிற்காக 4 கழிவறைகள் உள்ளன. இந்நிலையில் செப்டிக்டேங்கிள் அடைப்பு ஏற்பட்டதால் அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அந்த கழிவறைகளை பயன்படுத்த முடியாமல் அவதிபட்டு வந்தனர்.இதையடுத்து ஆரம்ப சுகாதாரநிலையத்தில் உள்ளசெப்டிக்டேங்கை சுத்தம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். செப்டிக்டேங்க் சுத்தம் செய்ய மல்லிப்பட்டினம் ராமர்கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் (வயது 58). என்பரை அழைத்தனர். அதன்பேரில் இரவு 11 மணியளவில் தங்கவேல், அவரது மகன் குமார் இவர்களுது உறவினர் திருவாரூர்மாவட்டம் முத்துபேட்டை   சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் ஆரம்பசுகாதார நிலையத்திற்கு சென்று அங்குள்ள செப்டிக்டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அவரது உறவினர் சுரேஷ் எதிர்பாராத விதமாக செப்டிக்டேங்கிற்குள் விழுந்தார். அதைகண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் அவரை காப்பாற்றுவதற்காக செப்டிக்டேங்கிற்குள் இறங்கி சுரேசை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.ஆனால் செப்டிக்டேங்கிற்குள் இறங்கிய அவர்கள் 2 பேரையும் விஷவாயு தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தந்தை–மகன் இருவரும் மயங்கி விழுந்து பலியானார்கள். இவர்களது உடல் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது,
படுகாயம் அடைந்த சுரேசை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து சேதுபாவசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


நோன்பு என்பது எல்லா சமூக மக்களுக்கும் பொதுவான ஒன்றுதான், அதை தவறுதலாக முஸ்லீம் மக்களுக்கு மட்டும்தான் முஸ்லீம் கடவுள் வகுத்து வைத்துள்ளதாக கருதுகின்றனர். நோன்பால் உடல் நலம் பெருவதோடு மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியமாக


செவ்வாய்க்கிழமை விரதம் கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும்.கார்த்திகை விரதம் :கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள். கந்தனை வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார். 
கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்' என்று அருள் புரிந்தார். கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி முருகவேலை வழிபாடு செய்ய வேண்டும். அன்று பகலில் உறங்குதல் கூடாது. சஷ்டி விரதம் :ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனஞ் செய்து அர்ச்சித்து வழிபட வேண்டும். பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும். கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம் செய்தல் வேண்டும். இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும். எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர். 

அதிராம்பட்டினம் அருகே உள்ள சேண்டாக்கோட்டை மாளியக்காடு காசங்காடு அக்கரைவயலில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் கதிராளம்மன் தேர் தூக்கும் திருவிழா மிக சிறப்பக நடைபெற்றது இதனையடுத்து கடந்த 08.7.2014 அன்று தொடங்கி 16.7.2014 இன்று தேர்தூக்கும் திருவிழாவில் ஆயிராத்துக்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேர் தூக்கி அம்மனை வழிப்பட்டனர் இதுமட்டும் இல்லாமல் வருகைதந்த உள்ளூர் மற்றும்  வெளியூர் பக்தர்களுக்கு அன்னதானமும் தண்ணீர் பந்தலும் அமைக்கபட்டடு  இருந்தது இந்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது {இத்துடன் படங்களும் சேர்க்கபபட்டுள்ளது -அதிரைநியூஸ்வேல்டு-

 அதிராம்பட்டினம் அருகே உள்ள சேண்டாக்கோட்டை மாளியக்காடு காசங்காடு அக்கரைவயலில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் கதிராளம்மன் தேர் தூக்கும் திருவிழா மிக சிறப்பக நடைபெற்றது இதனையடுத்து கடந்த 08.7.2014 அன்று தொடங்கி 16.7.2014 இன்று தேர்தூக்கும் திருவிழாவில் ஆயிராத்துக்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேர் தூக்கி அம்மனை வழிப்பட்டனர் இதுமட்டும் இல்லாமல் வருகைதந்த உள்ளூர் மற்றும்  வெளியூர் பக்தர்களுக்கு அன்னதானமும் தண்ணீர் பந்தலும் அமைக்கபட்டடு  இருந்தது இந்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது {இத்துடன் படங்களும் சேர்க்கபபட்டுள்ளது -அதிரைநியூஸ்வேல்டு-



Add caption



நீண்ட நாட்களாக அதிரையை ஏமாற்றி வந்த மேகக் கூட்டம் இன்றுமாலை சுமார் 06:15 க்கு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. எனினும் இந்த மழை மேலும் தொடர வேண்டும் என்பது பொதுமக்களின் ஆவல்

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் ஆண்மைக்குறைவை குணப்படுத்தும் பூ சங்கு மீனவர்கள் வலையில் அதிகஅளவில் சிக்குகின்றன அதிராம்பட்டினம் கடற்பகுதியில் பல்வேறு வகையான சங்குகள் மீனவர்கள் வலையில் அகப்படுகின்றன இதில் பூ சங்கு அதிக மருத்துவகுணம் கொண்டது. இந்த பூ சங்கு பார்ப்பதற்கு பூவைப் போன்றும் காலிப்ளவர் போன்றும் தோற்றத்துடன் காணப்படும் இதில் உள்பகுதியில் மரக்கலரில் சதை காணப்படும் இந்த சதை சமைத்துப்சாப்பிடுவதற்கு நல்ல ருசியாகவும்  மென்மையாவும் இருக்கும் மேலும் இது இடுப்புவலி ஆண்மைக்குறைவு வயிற்றுப்புண் கால்வலி உள்மூலம் வெளிமூலம் இரத்தமூலம் ஆகிய உஷ்ணசம்பந்தமான வியாதிகளை குணப்படுத்துகிறது என்பதால் பொதுமக்கள் இதை அதிகம் வாங்கிச்செல்கின்றனர் . இதுமட்டுமல்லாமல் இந்த சங்குகள் அழகுசாதனப்பொருட்கள் தயாரிப்பதற்கும் சுண்ணாம்பு தயாரிப்பதற்கும் இதுபயன்படுகிறது. இது கல்கத்தா மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது பற்றி மீனவர் மாரிமுத்து என்பவர் கூறுகையில் இந்த சங்கு பல்வேறு  வியாதிகளைக்குணப்படுத்தும் அற்புத மருந்தாக மட்டுமல்லாமல் சமைத்துச்சாப்பிட மிகவும் ருசியாகவும் இருக்கும் இது கடலிருந்து மூன்று பாகத்தொலைவில் அதிகமாக கிடைக்கும் இந்த சங்கு வலையில் அகப்படுவது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருக்கும் இருந்தாலும் சங்குவலையில் அகப்படுவதால் வலைபிய்ந்து வலைசேதமாகிவிடுகிறது இதனால் எங்களுக்கு  இழப்பும் ஏற்பட்டுவிடுகிறது என்றார்
 


அதிராம்பட்டினம் அருகே உள்ள சேதுபாவா சத்திரம் புதுமனைத்தெருவைச் சேர்ந்த சீனி முகம்மது (வயது 45) அதிராம்பட்டினம் அருகில் ஆண்டிவயல் கிராமத்தை சேர்ந்த எடின் (வயது 30) இவர்கள் இருவரும்
அதிராம்பட்டினத்திலிருந்து ராஜாமடம் சென்று கொண்டிருந்தபொது எதிர் பாராதவிதமாக இருவர் பைக்குகளும் மோதிக்கொண்டது. இதில் சம்பவ இடத்திலேயே சீனி முகம்மது உயிர் இறந்தார் மற்ற ஒருவர் எடின் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இதுபற்றி சேதுபாவா சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிராம்பட்டினத்தில்தமிழகஅரசின்சமுதாயவளைகாப்புதிட்டத்தின்கீழ்கர்ப்பிணிபெண்களுக்குகர்ப்பகாலங்களில்பின் பற்றவேண்டிய நடைமுறைகளைப்பற்றி அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோவில்மண்டபத்தில் நடைபெற்றதுஇதில் அதிராம்பட்டினம் பேரூராட்சி துணைதலைவர் பிச்சைதலைமை தாங்கினார் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுசிலா முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில் ராஜாமடம் மருத்துவஅலுவலர் டாக்டர் குமார் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலங்களில் பின்பற்ற வேண்டியவைளை விளக்கிப்பேசினார் இதில் 3வது வார்டுகவுன்சிலர் சிவக்குமார்  அங்கள்வாடிபணியாளர்கள் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் கலந்துகொண்டனர்.  -அதிரைநியூஸ்வேல்டு-

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், நடுவிக்காடு கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ பூர்ணாம்பிகா,ஸ்ரீ புஷ்காம்பிகா சமேத, ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார், ஸ்ரீ அன்னப்பசுவமி, ஸ்ரீ காளியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


கீழத்தோட்டத்தை சேர்ந்தவர்கள் வீரமணி(18),  பரமசிவம் (20). இவர்கள் இருவரும் மோட்டார் பைக்கில் இன்று கருங்குளம் அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த டெம்போவின் டயர் வெடித்து நேராக இவர்களின் பைக்கில் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பறிதாபமாக உயிரிழந்தனர்.


இருவரது உடலும் அதிரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.




தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் என்.சுப்பையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின் அவர் கூறியதாவது:–

பட்டுக்கோட்டை சாந்தான்காடு பகுதியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு வரைப்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு தயார் செய்தவுடன் அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும்சுற்றுலாத்துறை உதவியுடன் ரூ.75 லட்சம் மதிப்பில் காந்தி பூங்கா புதுப்பிக்கப்பட்டு குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்படுவதுடன் நடைபாதையும் அமைக்கப்படும்.அரசு மருத்துவமனையில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பழைய பேருந்து நிலைய காலி இடத்தில் திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். பட்டுக்கோட்டை பேருந்து நிலையம், சுத்தமாகவும், சுகாதாரமாக வைப்பதற்கு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக சிறுநீர் கழிப்பதற்காக சிறுநீர் கழிப்பறை அமைக்க நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்கள் நெரிசலை குறைப்பதற்கு பேருந்து நிலையத்தில் உள்ள காலி இடத்தில் அடுக்கு மாடி கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடியம்மன் கோவில் ஏரிகரையில், நடைபாதை ஒருபகுதி முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பகுதிகளிலும் பொது மக்கள் பங்களிப்புடன் விரைவில் நடைபாதை அமைக்கப்படும். மேலும், ஏரி ஆழப்படுத்துவதுடன், கரைகளை பலப்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மணி கூண்டு அருகே ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் சிறு பாலம் மற்றும் பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை சாலை 1 கிலோ மீட்டர் அளவிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பில் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலை 1 கிமீ. நீளத்திற்கும் 10 மீட்டர் அகலத்திற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கோரிக்கைக்கேற்ப பண்ண வயல் சாலையில் ஓடக்கரை ஏரி அருகே லாரிகள் நிறுத்துவதற்கு இடம் சுத்தம் செய்யப்பட்டு தற்பொழுது பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரப்பெற்றுள்ளது.பட்டுக்கோட்டை நகராட்சி–தஞ்சாவூர் சாலை ஆலடிக்குமுளையிலிருந்து மதுக்கூர் சாலை, பாபிபா வெளிப்பாளையம் வழியாக சூரப்பள்ளம் வரை 3.2 கிமீ அளவிற்கு ரூ.22 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைப்பதற்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், பட்டுக்கோட்டையில் பல்வேறு துறைகளின் அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு வளர்ச்சிப் பணிகள் முழு அளவில் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிகளுடன் நகர வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பட்டுக்கோட்டை – அறந்தாங்கி சாலை மார்க்கெட் ரோடு போன்ற பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கு.தர்மராஜன், நகர் மன்ற தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர்பாபு, துணைத்தலைவர் வி.கே.டி.பாரதி, ஆணையர் ரெங்கராஜன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜா, பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் கருணாகரன், உதவி பொறியாளர் திருவள்ளுவன், நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் மோகனா, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் தர்மலிங்கம், நிலைய மருத்துவ அலுவலர்கள் டாக்டர் சண்முகவேல், டாக்டர் பாஸ்கரன், மின்வாரிய செயற்பொறியாளர் சின்னையன், வட்டாட்சியர் பாஸ்கரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.


பிரபல கடல் ஆராய்ச்சியாளரான ஜேக்கஸ் கவுஸ்ட்டேவின் பேரனான பேபியன் கவுஸ்ட்டே கடலுக்கு அடியில் 31 நாட்கள் வசித்து சாதனை படைத்துள்ளார். புளோரிடாவில் 63 அடி ஆழத்தில் உள்ள ஆய்வகத்தில் 31 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்த அவர், தனது குழுவினருடன் காலை 10 மணியளவில் தரைக்கு வந்தபோது பலத்த ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டார். இதன் மூலம் 46 வயதான பேபியன், 30 நாட்கள் கடலுக்கடியில் வசித்த தனது தாத்தாவின் சாதனையை முறியடித்தார்.தனது சாகசங்கள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக பேபியன் கூறியுள்ளார். கடந்த ஜுன் 1ந் தேதி சாகச ஆய்வுப்பயணத்தை தொடங்கிய அவருக்கு விஞ்ஞானிகள் தினமும் சீதோஷ்ண நிலை குறித்த விவரங்களையும், கடல் அமிலமாதல் குறித்த தகவலையும் தந்து கொண்டிருந்தனர். தனது கடல் வாழ்க்கையை முடித்து தரைக்கு திரும்பிய பேபியன் கூறுகையில், 1960 ஆம் ஆண்டு கடலுக்கு கீழே 30 நாட்கள் வசித்து சாதனை படைத்த எனது தாத்தாவுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்றார்.


சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள அண்டா பகுதியை சேர்ந்த லியு என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்னர் மெயா என்ற பெயருள்ள ஒரு வயது நாயை தத்தெடுத்தார்.தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் பழக்கமுடைய லியுவின் அருகாமையில் இருந்தே வளர்ந்த மெயாவுக்கும் புகைப் பிடிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. சுமார் ஓராண்டு காலமாக லியுவுடன் சிகரெட் பிடிப்பதில் ‘கம்பெனி’ கொடுத்து வரும் மெயாவுக்கு இப்போதெல்லாம் படுக்கைக்கு போகும் முன்னர் ஒரு ‘தம்’ அடிக்காமல் தூக்கமே பிடிப்பதில்லை. 
குறிப்பாக, லியுவுக்கு பிடித்தமான பிராண்ட் ஆன ‘யுக்ஸி’ சிக்ரெட்டே மெயாவின் பிரதான தேர்வாக உள்ளது. அந்த அளவுக்கு சிகரெட்டுக்கு அடிமையாகி விட்ட மெயாவின் ஆரோக்கியத்தைப் பற்றி கலைப்படும் லியு, விரைவில் இந்த பழக்கத்தில் இருந்து தனது செல்ல நாயை விடுவிக்க என்ன வழி? என்று ஆலோசித்து வருகிறார்.

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவகுணம்கொண்ட லீகி கனவாய் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. பொதுவாக கனவாய் மீன்களில் ஓட்டுக்கனவாய் அழுக்குக்கனவாய் லீகி கனவாய் சங்குகனவாய் என 10க்கு மேற்பட்ட வகைகள் உள்ளன.இதில் ஓட்டுக்கனவாய் சங்குகனவாய் அழுக்குக்கனவாய் ஆகியவை தஞ்சை கடற்பகுதியில் கிடைக்கின்றன லீகி கனவாய் தஞ்சை கடல் பகுதியில் கிடைப்பது அரிது பெரும்பாலும் கனவாய் மீன்கள் மழை காலங்களில் தான் உற்பத்தியாகும் இந்நிலையில் சமீப காலங்களில் கடல் பகுதியில் மழை பெய்து வருவதால் கனவாய் மீன்கள் உற்பத்தியாகி தற்போது அதிகம் பிடிபடுகிறது இதுபற்றி மீனவர் மாரிமுத்தான் என்பவர் கூறுகையில் லீகி கனவாய் மீன்களைவிட அதிக எடைகொண்டது ஒரு கனவாய் மீன் ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும் இது கால்சியம் மற்றும் இரும்பு சத்துள்ளது மூலவியாதிகள் மூட்டுவலி மற்றும் இரத்தசோகை ஆகிய வியாதிகளை குணப்படுத்தக்கூடியது மற்ற வகை கனவாய்மீன்கள் கிலோ 120 முதல் 200 ரூபாய் விலைபோகும் ஆனால் லீகி கனவாய் கிலோ ஒன்றுக்கு 400 ரூபாய்க்கு விலை போகிறது இது சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார்.  அதிரைநியூஸ்வேல்டு



 


அதிராம்பட்டினம் பகுதியில் கலைக்கல்லூரி அரசு பொறியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் ஆசிரியர் பயிர்ச்சி பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி அரசு உதவிபெறும் பள்ளி தனியார் பள்ளிகள் என பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கும் நாட்களில் காலை மாலை நேரங்களில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஒவ்வொன்றிலும் அதிகமான கூட்டம் இருக்கும் இதில் அனைத்து பஸ்களிலும் பஸ் படிகளில் மாணவர்கள் தொங்கியபடி செல்கின்றனர். இவ்வாறு அதிக நபர்களை ஏற்றிச்சென்ற ஒரு தனியார் பேருந்து ஒன்று சில மாதங்களுக்கு முன் அதிராம்பட்டினம் காளிகோவில் அருகே நிலை தடுமாறி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதனால் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலத்த காயமடைந்தனர் இந்நிலையில் இந்த சம்பவத்தைத்தொடர்ந்து பஸ்வசதி இல்லாததால் மாணவர்கள் தொடர்ந்து பஸ்களில் தொங்கியபடியே பயணம் செய்வது பார்பவர்கள் அனைவரையும் அச்சத்துக்குள்ளாக்குகிறது இது பற்றி கல்லூரி மாணவர்களள் கூறும்போது பொதுவாகவே அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமிருக்கும் இப்படி இருக்கையில் கல்லூரி நாட்களில் மாணவர்களும் பஸ்ஸில் ஏறிச்செல்லவேண்டியுள்ளதால் கூட்டம் மேலும் அதிகமாகி படிகளில் தொங்கவேண்டியுள்ளது இதனால் மாணவிகள் பல மணிநேரம் காத்திருந்து பஸ்ஸில் பயணம் செய்யவேண்டியுள்ளது எனவே பள்ளி கல்லூரி நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்கினால் இந்த நிலை மாறும் மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கும் என்றனர்.