அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் அதிராம்பட்டினம் நகரசெயலாளர் பிச்சை வரவேற்புரையாற்றினார்.பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுப்பரமணியன் தலைமை தாங்கினார். நகரதுணைசெயலார் தமீம் நகர இளஞரணி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் சிறப்புப் பேச்சாளர் நடிகர் குண்டுகல்யாணம் ஆகியோர் கலந்துகொண்டு அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கிப்பேசினர் இக்கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பிரகாசம் நகர அம்மா பேரவை செயலாளர் உதயகுமார் நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹிர் நகர பொருளளார் துரைபாஞ்சாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


அதிராம்பட்டினம் கடல் வாய்க்கால் பகுதியில் உப்பளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் வழியாக நேற்று காலை ஆனந்த் என்ற மீனவர் கடலுக்கு சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த வாய்க்காலில் ஒரு சாக்கு மூட்டை தென்படுவதை பார்த்து அந்த சாக்கை எடுத்து பிரித்து பார்த்தார் அப்போது அந்த சாக்கு  மூட்டைக்குள் ஒரு அம்மன் சிலையும் அம்மனுக்கு சாத்தப்படும் பட்டுதுணிகளும் இருந்ததை கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.இது பற்றி மீனவர் ஆனந்த் அதிராம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எஸ். பசுபதி கிராம அதிகாரி மகரஜோதி ஆகியோர் அங்குவந்து சிலையை கைப்பற்றினர். பின்னர் அந்த சிலை பட்டுக்கோட்டை தாலுக்கா ஆபீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்கே எப்படி இந்தசிலை வந்தது எங்கே திருடப்பட்டது ஏன் இங்கு கொண்டு வந்து போடப்பட்டது  என்பது பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தஞ்சை மாவட்ட கடற்ப்பகுதியில் டி.ஐ.ஜி சஞ்சய்குமார் மேற்ப்பார்வையிலும் எஸ்.பி தர்மராஜன் தலைமையிலும் போலீசார் ஆப்ரேசன் ஆம்லாவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தம்பிக்கோட்டையிலிருந்து கட்டுமாவடி வரை 45 கிலோ மீட்டர் தூரம் கொண்டகடல் பகுதியை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மீனவ கிராமங்கள் மீன் இறங்கும் தளங்கள் போன்ற பகுதிகளில் கூடுதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தம்பிக்கோட்டை இராஜமடம் பிள்ளையார்திடல் இரண்டம்புளிகாடு விளங்குளம் போன்ற சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.அதிராம்பட்டினம் துறைமுகங்களில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.மீனவர்அடையாள அட்டை படகுக்கு உரிய ஆவனங்கள் உள்ளதா என்று தணிக்கை செய்தனர்.இரவு பகலாக கடலில் 10க்கு மேற்ப்பட்ட படகில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலைகளில் அதிராம்பட்டினத்திலிருந்து கட்டுமாவடி வரை போலீசார் இரண்டு சக்கர வானத்திலும் நான்கு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். வழிபாட்டு தலங்கள் சுற்றுலா தலங்கள் வாட்ச் டவர் போன்ற பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆம்லா ஆப்ரேசனில் கடலோர பாதுகாப்பு குழமத்தோடு சட்டஒழுங்கு போலீசார்.கீயூ பிரிவு போலீசார் மத்திய உளவுதுறை போலீசார் மற்றும் மீன்துறை போன்ற துறைகள் ஈடுபட்டு வருகின்றனர்.



 அதிராம்பட்டினம் கடற்பகுதிகளில் தில்லைநண்டுகள் அதிகம் கிடைக்கின்றன அதாவது தில்லைநண்டுகள் சேற்றுப்பகுதியில் உற்பத்தியாகக்கூடியது. அதிராம்பட்டினம் கடற்பகுதியான தம்பிக்கோட்டை மறவக்காட அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஆகிய கடற்கரைப்பகுதியில் சேற்றுப்பகுதியாக உள்ளதால் இந்தப்பகுதிகளில் தில்லைநண்டுகள் அதிகம் கிடைக்கின்றன மேலும் இந்த வகை நண்டுகள் தில்லை மரங்கள் உள்ள பகுதிகளில் சேற்றில் பொந்து அடித்து வாழக்கூடியது இந்த பொந்து சுமார் 3 அடி துரம் ஆள முள்ளதாக இருக்கும். ஒவ்வொரு பொந்திலும் குறைந்தது 3 நண்டுகளிலிருந்து 5 நண்டுகள் வரை இருக்கும். இந்த பொந்துகளிலேயே இனப்பெருக்கம் செய்தும் வருகிறது இது தில்லை மரவேர்களில் உள்ள பால் போன்ற வெண்மை நிற திரவத்தையே உணவாக உட்கொண்டு வருகிறது தில்லை மரங்களின் வேர்ப்பகுதியில் இந்த வகை நண்டுகள் வாழ்வதால் இதை தில்லை நண்டுகள் என அழைக்கிறார்கள். இது ஒவ்வொன்றும் அதிகபட்சம் 100 கிராம் எடை உள்ளதாக இருக்கும். இந்த தில்லைநண்டுகளை பிடிக்க தனி மீனவர்கள் உண்டு பொந்தில் இந்த நண்டு இருப்பதால் கையை விட்டுதான் பிடிப்பார்கள் இதற்கு நல்ல அனுபவம் வேண்டும் காரணம் பொந்தில் நண்டு மட்டுமல்லாமல் பாம்பும் இருக்கும் இதனால் கவனமுடன் பிடிக்க வேண்டியிருக்கும் இந்த நண்டு பிடிக்கும் தொழிலை ஒரு சிலர் பாரம்பரிய தொழிலாக செய்து வருகிறார்கள் இதுபற்றி மீனவர் மாரிமுத்தான் என்பவர் கூறுகையில் அதிராம்பட்டினம் கடல்பகுதிய ஒட்டி சதுப்பு நிலப்பகுதியில் தில்லை நண்டுகள் அதிக அளவில் பொந்து அடித்து கொண்டு வாழ்ந்து வருகிறது மேலும் இந்தவகை நண்டுகள் மருத்துவகுணம் கொண்டது. இதை ரசம் வைத்துச்சாப்பிட்டால் முதுகுவலி மூட்டுவலி வயிற்றுப்புண் தீராத காய்ச்சல் பித்தம் சம்ந்தப்பட்ட வியாதிகள் ஆகிய வியாதிகள் குணமாகும் இதனால் இதை கிராமப்பகுதிகளில் உள்ளவர்கள் மருந்துக்காக அதிகம் வாங்கிச்செல்கிறார்கள் இது மழைகாலங்களில் அதிகம் கிடைக்கின்றன வெயில் காலங்களில் சேற்றுமண் இறுகி காணப்படுவதால் கடல் ஓர வாய்க்கால்களுக்குச் சென்று விடும் தற்போது அதிராம்பட்டினம் பகுதிகளில் ஓரளவு மழை பெய்து மண் ஈரமாக உள்ளதால் தற்போது தில்லை நண்டுகள் அதிகம் கிடைக்கின்றன என்றார்




அதிராம்பட்டினம் சாலைப்போக்கு வரத்து அதிகம் உள்ள பேரூராட்சியாகும் இதில் கிழக்குக்கடற்கரைச் சாலைக்கு அடுத்தபடியாக பட்டுக்கோட்டை சாலை அதிக போக்குவரத்துள்ள சாலை இந்த சாலை மிகக் குறகிய நிலையில் உள்ளதால் போக்குவரத்து சிரமம் ஏற்படுகிறது இந்நிலையில் சாலை குறகியநிலையில் இருப்பதோடு சாலையில் போலீஸ் ஸ்டேசனிலிருந்து வண்டிப்பேட்டை வரை சாலையின் இரு புறங்களிலும் மணல் அதிகம் இருப்பதால் பஸ் அல்லது கனரக வாகனங்கள் வரும்போது இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவம் அடிக்கடி ஏற்படுகிறது இதுதொடர்பாக பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கைவைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மேலும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க அரசு உடனயாக போலீஸ் ஸ்டேசன் முதல் வண்டிப்பேட்டை வரை சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

அதிராம்பட்டினம் பெரியமார்க்கெட்டில் நேற்று விற்ப்பனைக்கு வந்த மீன்களில் ஒரு திருக்கைமீன் 35 கிலோ எடைஇருந்து தஞ்சை மாவட்ட விசைப்படகுகள்  கடந்த 14ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத்தொடர்ந்து உள்ளுர் மார்க்கெட்டுக்களுக்குறைந்து மீன்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது அதிராம்பட்டினம் மார்க்கெட்டில் விற்கிறார்கள் அப்படி விற்பனைக்கு மீன்களில் முண்டாங்கனி திருக்கை என்ற ஒரு மீன் 35 கிலோ எடைஇருந்தது இந்த வகை மீன் பெரும் பாலும் ஆழ்கடல் பகுதிகளில் தான் கிடைக்கும் நம்முடைய கடல் பகுதிகளில் இந்தமீன்கள் கிடைப்பது அபூர்வம் என்று மீனவர்கள் கூறினர்.





































ஜூன் 18-

நம்மில் சிலர் பாம்பை பிடித்து விளையாடுவதையே, அவர்களது குடும்பத்தார் ஆபத்தான விளையாட்டு என்று கூறுவதுண்டு.

ஆனால், தாய்லாந்தின் உல்லாச நகரமான பட்டயாவில் பாம்புகளை வைத்து வித்தை செய்யும் ஒருவர், மிகவும் வீரியம் கொண்ட விஷப்பாம்புகளை கடித்து, விளையாடி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார்.

மஞ்சளும், கறுப்பும் கலந்த நிறத்தில் தரையில் ஊர்ந்து ஓடும் பயங்கரமான விஷப்பாம்பை, மெல்ல குனிந்து மண்டியிட்டு, தனது வாயால் கவ்வி, அது தனது தலையை சுற்றிப் பிண்ணிக் கொள்வதற்குள், பாம்பின் தலையை தனது பல்லால் கடித்து, சில நிமிடங்கள் வரை இவர் சிறைபடுத்தி வைக்கிறார்.

மேலும், கொடிய விஷம் கொண்ட கருநாகப்பாம்பின் வாயுடன் தனது உதடுகளை பொருத்தி, தனது வாயில் வைத்திருக்கும் உணவை ஊட்டி விட்டும் இவர் அசத்தி வருகிறார்.

இவரது வித்தையை காண வந்த பார்வையாளர் ஒருவர், ‘நான் இதைப்போல் எத்தனையோ பாம்பாட்டிகளை பார்த்து விட்டேன். அவர்களது உயிர் பாம்புக் கடியில் தான் போய் உள்ளது’ என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்.

அதிர்ஷ்டவசமாக இவர் வித்தை காட்டி பிழைத்து வரும் இடத்தில் இருந்து கல்லெறி தூரத்தில், பாம்புக் கடிக்கென அதிநவீன சிகிச்சையளிக்கும் தாய்லாந்தின் சிறப்பு மருத்துவமனையான 'ரெட் கிராஸ் இன்ஸ்டிட்டியூட்' உள்ளது என்பது சற்று ஆறுதலான விஷயம் தான் என்றாலும், 'வயிற்றுக்காக மனிதன் எப்படி எல்லாம் பிழைக்க வேண்டியுள்ளது?' என்பதை எண்ணிப் பார்க்கும் போது, மனது என்னவோ.. வலிக்கத் தான் செய்கிறது.



அதிரையில் மனநலம் பாதிப்படைந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக அதிரை பகுதிகளில் சுற்றி திரிந்தார். கர்ப்பமாக இருந்து வந்துள்ளார். நேற்று அரசு உயர் நிலை பள்ளி எதிரே அமைந்துள்ள நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான பயணியர் தங்கும் விடுதியின் புதிய கட்டிடத்தில் மனநிலை பாதித்த பெண் பலத்த சப்தத்துடன் அழுதுகொண்டு இருந்துள்ளார். அழும் குரலை கேட்ட  ( 1 ம் நம்பர் ) அரசு உயர்நிலை பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் கரோலின் , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ( 2 ம் நம்பர் ) ஆசிரியைகள் அருள் ஜோதி, சுப்பு லட்சுமி சத்துணவு பொறுப்பாளர் கிளாரா, ஜீவா ஆகியோர் விரைந்து சென்று வலியால் துடித்து கொண்டிருக்கும் மனநிலை பாதித்த பெண்ணுக்கு முதலுதவி செய்துள்ளனர். பிரசவ வலியால் துடிப்பதை அறிந்து கொண்ட இவர்கள்  108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ செவிலியர்கள் வள்ளி மற்றும் அதிரை செட்டிதோப்பு காலனியை சேர்ந்த செவிலியர் சுகன்யா ஆகியோர் பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை சத்து குறைந்தும், எடை குறைவாகவும் காணப்பட்டதால் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டது. மனநிலை பாதித்த பெண் மற்றும் அவரது குழந்தை அதிரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 பொள்ளாச்சியை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 45 பயணிகள் ஆம்னி பேருந்தில் வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் சுற்றுலா வழிபாட்டை முடித்துக்கொண்டு இராமேஸ்வரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

நேற்று இரவு பேருந்து தம்பிக்கோட்டை பகுதியில் வந்துகொண்டிருக்கும் போது முக்கூட்டுசாலையோர உணவு விடுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு  பயணிகள் டிபன் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பயணிகளிடம் வாய் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் வாய் தகராறு முற்றியதில் வாகனத்தின் கண்ணாடிகளை கட்டைகளால் தாக்கி நொறுக்கியுள்ளனர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் பலத்த சேதமடைந்துள்ளது.

இதைதொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் வாகனத்தை தானாக ஓட்டிச்சென்று தாமரங்கோட்டை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த பட்டுக்கோட்டை  டிஎஸ்பி செல்லபாண்டியன தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். சேதமடைந்த ஆம்னி பேருந்து அதிரை காவல் நிலையம் முன்பாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரையில் கண்ழடியன் கொல்லையில் திடீர் தீ விபத்து ஏற்ப்பட்டது அதில் மிக்சி கிரைண்டர் தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் பள்ளிக்குளந்தைகளின் சான்றிதல்கள் ரேசன் கார்டு உள்பட் 2 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாயின.



தஞ்சை கடற்பகுதிகளில் அழிந்து வரும் அலையாத்தி காடுகள் நாகை திருவாரூர் தஞ்சை மாவட்ட கடற்பகுதிகளில் அரணாக இருந்து கடல் பகுதிகளை காத்துக்கொண்டிருக்கும் அலையாத்திக்காடுகள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது ஆசியக்கண்டத்திலேயே அலையாத்தி காடுகள் உள்ளன ஒரே பகுதி தமிழ்நாடுதான் என்பது மிகச்சந்தோஷப்பட வேண்டிய விஷயம் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி இந்தோனேசியா உள்ளிட்ட பகுதிகளை உலுக்கி பல உயிர்களை பலி வாங்கிய சுனாமி தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட கடல் பகுதிகளை நெருங்காமல் மக்களை காப்பாற்றியது அலையாத்தி காடுகள் தான் அந்த அளவுக்கு மக்களை காப்பாற்றும் சக்தி உடைய இந்த அலையாத்திக்காடுகள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது மிகுந்த வேதனைக்குறியதாக உள்ளது மேலும் அலையாத்தி காடுகள் அழிந்து வருவதால் கடல் வளமும் பாதிக்கப்படுகிறது என்பது மறக்க முடியாத ஒன்றாகும் இறால் நண்டு மீன் ஆகியவை இனப்பெருக்கம் செய்ய அலையாத்தி மரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது நல்ல தண்ணீரும் உப்புத்தண்ணீரும் சேரும் இடங்களில் அலையாத்திக்காடுகள் உள்ளதால் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய அலையாத்தி மரங்களின் வேர் பகுதிகளை நாடி வருகிறது இப்படி இருக்கையில் தற்போது அலையாத்தி மரங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளது இதற்கு முக்கிய காரணம் கடலில் மழைநீர் மற்றும் நல்ல தண்ணீர் கலந்து வந்த நிலைமாறி தற்போது கெமிக்கல் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கலந்து வருவதுதான் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள் ஒரு காலத்தில் தஞ்சை கடல் பகுதியில் கொடிகட்டி பறந்த மீன்பிடித்தொழில் தற்போது நழிவடைந்து விடட்தற்கு முக்கிய காரணம் கடல்வளம் குறைந்ததனால் தான் கடல் வளம் கூடவேண்டும் என்றால் அலையாத்திக்காடுகளைப் பராமரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் இது பற்றி கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் டாக்டர் பாலாஐp கூறுகையில் கடலில் மீன் உற்பத்திக்கு அலையாத்தி மரங்கள் முக்கிய பங்குவகிக்கிறது அலையாத்தி இலைகள் மக்கி கடலில் கலப்பதால் கடலில் உள்ள உயிரினங்களுக்கு இது உணவாகப்பயன்படுகிறது குறிப்பாக இறால் மற்றும் நண்டுவகைகள் அலையாத்திக்காடுகள் உள்ள பகுதிகளில் உற்பத்தி அதிகம் இருக்கும் இதனால் தான் அதிராம்பட்டினம் கடல்பகுதியில் இறால் அதிகம் கிடைக்கிறது என்றார் .

தத்துருபமாக எடுக்கப்பட்ட புகைப்படம்.




ஜூன்.11–
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று தொடங்கியது.
இதில் தஞ்சை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், காரைக்கால், மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்ள அதிகாலை முதலே மைதானத்துக்கு வெளியே ஆர்வமுடன் காத்திருந்தனர்.
பின்னர் காலை 5 மணிமுதல் இளைஞர்கள் அனைவரும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அவர்கள் ஊர்வாரியாக வரிசையாக அமர்த்தப்பட்டனர்.
இந்த முகாமானது 9 நாட்கள் நடைபெறுகிறது. முகாமின் முதல் நாளான இன்று இளைஞர்கள் அனைவருக்கும் உயரம் சரிபார்த்தல், மார்பளவு சரிபார்த்தல், எடை ஆகியவைகள் சரி பார்க்கப்படுகிறது.
பின்னர் இருப்பிடச் சான்று, பள்ளி சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறது. இவை அனைத்திலும் தகுதி உடையவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும். அதில் தகுதி பெறும் இளைஞர்கள் மட்டும் ராணுவத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
முகாம் நடைபெறும் நாட்களில் பஸ்கள் அனைத்தும் அன்னை சத்யா விளையாட்டு அரங்கு அருகில் நின்று செல்ல வசதி செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி முகாம் நடக்கும் இடத்தில் கழிவறை, தண்ணீர் வசதி, தீயணைப்பு, சுகாதார துறையினர், மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவுடன் ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் உள்ளது.

   (படங்கள் அதிரைநியூஸ்வேல்டு)











மதுரையிலிந்து வேளாங்கண்ணி சென்றபோது அதிராம்பட்டினம் அருகே மாடு குறுக்கே வந்ததால் கார் விபத்து. 4 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர் கால்நடைகள் சேது ரோட்டில் அதிகம் நடமாட்டம் இருப்பதால் வாகன விபத்தை தவிர்க்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?