வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
Posted October 09, 2015 by Adiraivanavil in Labels: பேராவூரணி
பேராவூரணி அக்டோபர்-9;
18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்கவும், வாக்காளர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்றிடவும், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்திட, வரும் அக்டோபர்-11 ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
பேராவூரணி தொகுதியில் அந்தந்த வாக்குச்சாவடிகளிலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேர்தல் பிரிவு அலுவலர்களால் பெறப்பட உள்ளது. இதுகுறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரையில் முக்கிய சாலைகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேராவூரணி வட்டாட்சியர் கோ.ரகுராமன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் இரா.ராஜாராம், தனி வட்டாட்சியர் ஆர்.கோபி, வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள் கவிதா, சுரேஷ், ராஜமாணிக்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜா, பெரியநாயகி, முருகேசன், ரெத்தினவேல், மருததுரை, கிள்ளிவளவன், சீனிவாசன், ஜெயதுரை, நிக்மதுல்லா, சங்கீதா மற்றும் கிராம உதவியாளர்கள், வெங்கடேஸ்வரா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஏ.பழனிவேல் , புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இருநூறுக்கும் மேற்பட்ட வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
0 comment(s) to... “வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி”