திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள வடக்கு இடையபட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ஆடுகள் அதிக அளவில் வளர்த்து வந்தார். மேலும் கால்நடைகளும் அவரிடம் உள்ளது. இந்த நிலையில் அவர் வளர்த்த ஆடு ஒன்று நேற்று முன்தினம் இரவு குட்டி ஈன்றது.

ஒன்றன் பின் ஒன்றாக 4 குட்டிகளை ஆடு ஈன்றது. இந்த 4 ஆட்டுக்குட்டிகளில் 3 மட்டுமே ஆட்டுக் குட்டி போல் இருந்தது. மற்றொரு ஆட்டுக்குட்டி வித்தியாசமாக இருந்தது. இதனால் அந்த ஆட்டுக்குட்டியை மின்விளக்கு வெளிச்சத்தில் வைத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

மனித உருவில் இருந்தது

அந்த ஆட்டுக்குட்டியின் உடல் மற்றும் முகம் மனித உருவில் இருந்தது. கால்கள் மிகவும் சிறிய அளவிலே இருந்தது. இரவு பிறந்த ஆட்டுக்குட்டி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் அந்த மனித உருவில் இருந்த ஆட்டுக்குட்டி இறந்ததும் அதனுடன் பிறந்த மற்றொரு ஆட்டுக்குட்டியும் இறந்தது.

இந்நிலையில் மனித உருவில் ஆட்டுக்குட்டி பிறந்த சம்பவம் காட்டுத் தீ போல் அந்த பகுதியில் பரவியது. இதை தொடர்ந்து சுற்றுவட்டாரங்களில் உள்ள மக்கள் வடக்கு இடையபட்டியில் திரண்டனர். அனைவரும் மனித உருவில் இருந்த ஆட்டுக்குட்டியை பார்த்து ஆச்சரியப்பட்டதுடன் பலரும் தங்களது செல்போன்களில் படம் பிடித்துக் கொண்டனர்.

பின்னர் இறந்த ஆட்டுக்குட்டிகளை அருகில் உள்ள ஒரு இடத்தில் குழிதோண்டி புதைத்தனர். அதன் பின்னரும் அதிசய ஆட்டுக்குட்டி பற்றிய தகவல் அறிந்து அதிக அளவிலானோர் இதை காண வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மனித உருவில் ஆட்டுக்குட்டி பிறந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


பட்டுக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டை கொன்று நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 83). ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு. இவருடைய மனைவி விஜயநிர்மலா. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவர் வீட்டில் உள்ளார். மகன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டில் குணசேகரன் மட்டும் தனியே வசித்து வந்தார். நேற்று காலை குணசேகரனின் வீட்டுக்கு அவருடைய தங்கை மகள் ஜாய் சென்றார். அப்போது வீட்டுக்குள் குணசேகரன் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஜாய் கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே குணசேகரன் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு குணசேகரன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

விசாரணை

இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிச்சை, இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். தஞ்சையில் இருந்து போலீஸ் மோப்பநாய் டாபி வந்து மோப்பம் பிடித்தது. மோப்ப நாய் குணசேகரன் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். குணசேகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

மிளகாய் பொடி 

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலையாளிகள் குணசேகரனின் கண்களில் மிளகாய்பொடியை தூவி அவரது கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததும் பின்னர் அவர் அணிந்திருந்த கைச்செயின், 2 மோதிரங்கள் உள்பட 7½ பவுன் நகைகளையும், வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதனால் அவர் நகை- பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டை கொன்று மர்ம ஆசாமிகள் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நன்றி dailythanthi

பட் டுக் கோட்டை, டிச.10
தமி ழக முன் னாள் அமைச் சர் எஸ் டி எஸ் நினைவு தினத்தை முன் னிட்டு பட் டுக் கோட்டை பாலி டெக் னிக் கல் லூரி, சில்க் சிட்டி லயன்ஸ் கிளப், எஸ் டி எஸ். அறப் பணி அறக் கட் டளை ஆகி யவை இணைந்து முப் பெ ரும் நலத் திட்ட நிகழ்ச் சி களை நடத் தி யது. பட் டுக் கோட்டை பாலி டெக் னிக் முதல் வர் முத் து வேலு தலைமை வகித் தார்.
சில்க் சிட்டி லயன்ஸ் கிளப் பொரு ளா ளர் கேச வன் முன் னிலை வகித் தார். முத லில் அய்யா எஸ்.டி.எஸ்.ன் உரு வப் படத் திற்கு மல ரஞ் சலி மற் றும் புக ழஞ் சலி செலுத் தப் பட் டது. எழுத் தா ளர் மறை ம லை யான் கலந்து கொண்டு மல ரஞ் சலி மற் றும் புக ழஞ் சலி செலுத் தி னார். எஸ் டி எஸ் அறப் பணி அறக் கட் ட ளை யால் வரு டந் தோ றும் வழங் கப் ப டும் கல்வி உத வித் தொகை ரூ 10 ஆயி ரத்தை கல் வி யில் சிறந்து விளங் கும் இயந் தி ர வி யல் து றையை சேர்ந்த மாண வர் முக ம து அ சா ரு தீ னுக்கு கல் லூரி இயக் கு நர் திட் டக் குடி வைத் தி லிங் கம் வழங் கி னார்.
தொடர்ந்து நடந்த கண் பரி சோ தனை மற் றும் சிகிச்சை முகா மில் 240 பய னா ளி கள் கலந்து கொண் ட னர். இதில் 27 பேர் அறுவை சிகிச் சைக் காக மதுரை அர விந்த் கண் மருத் து வ ம னைக்கு அனுப்பி வைக் கப் பட் ட னர். 82 நபர் க ளுக்கு கண் கண் ணா டி கள் அணிய பரிந் து ரைக் கப் பட் டுள் ளது. தொடர்ந்து பாலி டெக் னிக் கல் லூ ரி யில் ரத் த தான முகாம் மற் றும் ரத் த வகை கண் ட றி தல் முகாம் நடந் தது. 120 பேர் ரத் த தா னம் செய் த னர். 247 மாணவ, மாண வி யர் க ளுக்கு ரத் த வகை கண் ட றி யப் பட் டது.
தொடர்ந்து வள் ள லார் முதி யோர் இல் லத் தில் 30 முதி ய வர் க ளுக்கு அன் ன தா னம் வழங் கப் பட் டது. முகா மில் இளை யோர் செஞ் சி லுவை கிளப் ஒருங் கி ணைப் பா ளர் கைலா ச பதி, ரோட் ட ராக்ட் கிளப் ஒருங் கி ணைப் பா ளர் விஜய் ரா யன், லியோ கிளப் ஒருங் கி ணைப் பா ளர் மீனாட் சி சுந் த ரம், தேசிய மாண வர் படை அலு வ லர் சிவக் கு மார், நாட் டு ந லப் ப ணித் திட்ட அலு வ லர் கள் முக ம து அலி, அருள் நெல் சன் மற் றும் மாணவ, மாண வி கள், பெற் றோர் கள், பொது மக் கள் கலந்து கொண் ட னர்.


அதிராம்பட்டினம் மற்றும் இதைசுற்றியுள்ள பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது இதனையடுத்து மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் தற்போது மழை நீர் தேங்கியுள்ளது இதேபோல் மழை இன்னும் இரண்டு தினங்களுக்கு தொடர்ந்தால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது





 அதிராம்பட்டினம் அருகே உள்ள கருங் கு ளம் நசு வினி காட்டு ஆற் றில் வெள் ளம் பெருக் கெ டுத்து ஓடு கி றது. அதி ராம் பட் டி னம், கரை யூர் தெரு, காந் தி ந கர், கருங் கு ளம், கரு சைக் காடு, முடுக் கு காடு கிரா மங் க ளின் அரு கில் நசு வினி காட் டாறு ஓடு வ தால் ஆற் றின் கரை கள் உடைந்து விடா மல் அப் ப குதி மக் கள் தீவிர கண் கா ணிப்பு பனி யில் ஈடு பட்டு வரு கின் ற னர். வரு வாய்த் து றையை சேர்ந்த அலு வ லர் கள் ஆற் றின் கரை கள் உடைக் கா மல் பாதுக் காக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று அப் ப குதி மக் கள் கோரிக்கை வைத் துள் ள னர். மேலும் அதி ராம் பட் டி னம் பகு தி யில் கடந்த 3 தினங் க ளாக தொடர் மழை பெய்து வரு கி றது. நேற்று பகல் முலு வ தும் கன மழை பெய் தது.

அதிராம்பட்டினத்தில் தொடர்ந்து மழை பெய்து வரு வ தால் 3,000 மீன வர் கள் 2 நாட் க ளாக கட லுக்கு மீன் பி டிக் கச் செல் ல வில்லை. தஞ்சை மாவட் டம் அதி ராம் பட் டி னத் தில் கடந்த 2 தினங் க ளாக தொடர்ந்து கன மழை பெய்து வரு கி றது. நேற் று முன் தி னம் இரவு முதல் நேற்று மாலை வரை கன மழை மற் றும் மித மான மழை பெய்து கொண்டே இருந் தது.
அதி ராம் பட் டி னம் கட லில் குளிர்ந்த சாரல் காற்று வீசு வ து டன், பலத்த மழை யும் பெய் வ தால் 3,000 மீன வர் கள் நேற் று முன் தி னம் கட லுக்கு மீன் பி டிக்க செல் ல வில்லை. 2வது நாளாக நேற்று மீன வர் கள் கட லுக்கு செல் ல வில்லை. மேலும் தொடர் ம ழை யால் புதுக் கோட்டை உள் ளூர் செல் லுக் கு றிச்சி ஏரி நிரம்பி நேற்று காலை சருக்கை வழி யாக நீர் வழிந் தோ டி யது. பொதுப் ப ணித் துறை, வரு வாய்த் துறை ஆகிய துறை க ளின் அதி கா ரி கள் மற் றும் அலு வ லர் கள் பொக் லைன் இயந் தி ரம் மூலம் ஏரி யில் இருந்து உப ரி நீர் வெளி யே றும் வாய்க் கால் களை சீர மைத்து உப ரி நீரை வெளி யேற் றும் பணி யில் ஈடு பட் டுள் ள னர்.

சேது பா வா சத் தி ரம், டிச.8:
சேது பா வா சத் தி ரம் அருகே மின் சா ரம் தாக்கி விவ சாய கூலித் தொ ழி லாளி பலி யா னார்.
தஞ்சை மாவட் டம் சேது பா வா சத் தி ரம் அருகே உள்ள வீரக் குடி மணக் காட்டை சேர்ந் த வர் தாம ரைச் செல் வன் (50), விவ சாய கூலி தொழி லாளி. இவர் நேற்று மதி யம் தனது வீட் டில் பழு த டைந்த மின் விளக்கை கழட் டி விட்டு புதி தாக மின் வி ளக்கு மாட் டி யுள் ளார்.
அப் போது இவர் மீது மின் சா ரம் பாய்ந் துள் ளது. உயி ருக்கு ஆபத் தான நிலை யில் மருத் து வ ம னைக்கு கொண்டு செல் லும் வழி யில் இந்த சம் ப வம் குறித்து பேரா வூ ரணி போலீ சார் வழக் குப் ப திவு செய்து விசா ரனை நடத்தி வரு கின் ற னர்.

12வது தேசிய அள வி லான கராத்தே போட்டி ஹரி யா னா வில் சமீ பத் தில் நடந் தது.
இதில் அதிராம்பட்டினம்  அடுத்த பள் ளி கொண் டான் லாரல் மேல் நி லைப் பள்ளி 11ம் வகுப்பு மாண வர் ஏ.சூரி ய பி ர காஷ் 60 - 64 கிலோ எடைப் பி ரி வில் வெண் க லப் ப தக் கம் வென்று பள் ளிக்கு பெருமை சேர்த் துள் ளார். மாண வ ருக்கு பள்ளி வளா கத் தில் பாராட்டு விழா நடந் தது. விழா விற்கு பள் ளி யின் தாளா ளர் வி.பால சுப் ர ம ணி யன் தலைமை வகித் தார். முதல் வர் பி.சந் தி ர சே க ரன் முன் னிலை வகித் தார். துணை முதல் வர் வி.பி.சந் தி ர சே கர் வர வேற் றார். தேசிய அள வில் வென்று பள் ளிக்கு பெருமை சேர்த்த மாண வர் சூரி ய பி ர காஷை பள் ளி யின் தாளா ளர், முதல் வர், துணை முதல் வர் மற் றும் பள் ளி யின் இயக் கு னர் கள் எலி ச பெத் தே வா சீர் வா தம், பாரத், ஆசி ரிய, ஆசி ரி யை கள், மாணவ, மாண வி கள் பாராட்டி, வாழ்த்து தெரி வித் த னர்.
பள்ளி தலை மை யா சி ரி யர் ஆறு மு கம் நன்றி கூறி னார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழைபெய்து வருதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்குவது அதிகரித்து வருகிறது. இதுவரை 400 எக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில் தஞ்சையில் நேற்று முன்தினம் இரவு மழைதூறல் காணப்பட்டது. நள்ளிரவுக்கு பின்னர் மழை இன்றி காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணிஅளவில் மழை பெய்யத்தொடங்கியது. இந்த நிலையில் 11.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாது மழை கொட்டியது. அதன் பின்னரும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

400 எக்டேர் பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, வல்லம், அய்யம்பேட்டை, மஞ்சளாறு, திருவிடைமருதூர், அணைக்கரை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, மதுக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்தமழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடிசெய்யப்பட்டுள்ளன. இதில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை சுமார் 350 எக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்பட்டன. ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்குவது அதிகரித்து வருகிறது. நேற்று இது 400 எக்டேராக அதிகரித்தது.

நெற்பயிர்கள் அழுகின

மேலும் 64 எக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி சேதம் அடைந்துள்ளன. தண்ணீர் தேங்கிய வயல்களில் நீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தண்ணீர் தேங்கிய வயல்களில் நெற்பயிர்கள் அழுகி காணப்படுகின்றன. இதனால் எவ்வளவு எக்டேரில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன என்பதை கணக்கிட முடியவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மழைநீர் வடிந்தால் தான் எவ்வளவு எக்டேர் பாதிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வரும். தொடர்ந்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் மழைநீர் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

மழைஅளவு

தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அதிராம்பட்டினம் 35.5, கும்பகோணம் 15, பாபநாசம் 14.2, தஞ்சாவூர் 6, திருவையாறு 15, திருக்காட்டுப்பள்ளி 17, வல்லம் 10, கல்லணை 7.6, அய்யம்பேட்டை 36, திருவிடைமருதூர் 19.2, மஞ்சளாறு 26.4, பூதலூர் 7.2, வெட்டிக்காடு 10, ஈச்சன்விடுதி 21, ஒரத்தநாடு 7.7, மதுக்கூர் 16, பட்டுக்கோட்டை 20, பேராவூரணி 27, அணைக்கரை 34, குருங்குளம் 4, நெய்வாசல்தென்பாதி 10.4. 

 அதிரை செல்லிக்குறிச்சி ஏரி முழுக்கொள்ளவை எட்டியது—மதகுகளை திறந்துவிட;கோரிக்கை
Add caption







பேராவூரணி டிசம்பர்-6
பேராவூரணியை அடுத்த பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி சிறார் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது.
     பள்ளி தலைமையாசியர் வீரம்மாள் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார். குறிச்சி மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவானந்தம், பள்ளி சிறார் மற்றும்  குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் சந்திரசேகரன் ஆகியோர் பள்ளிக் குழந்தைகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். ஒன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு  டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு, சுகாதார கல்வி முறை, உடல்நலம், மனநலம், கை கழுவுதல் குறித்த நலக்கல்வி பயிற்சி வழங்கப்பட்டது. 
   முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் வி.பிரதாப்சிங், எம்.கருப்பசாமி, சுகாதார செவிலியர், மருந்தாளுநர்கள் நிலவழகி, தமிழ்செல்வி, தனலட்சுமி, ஆசிரியைகள் ஜெயந்தி, குளோரி, சத்துணவு அமைப்பாளர் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிறைவாக சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இராமநாதன் நன்றி கூறினார்.

டெல்டா மாவட்டத்தில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்சென்னை, டிச.4–
டெல்டா மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையை மழை புரட்டி போட்டு விட்டது. டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தஞ்சையில் நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை தொடர்கிறது.
இந்த நிலையில் டெல்டா மாவட்டத்தில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரைக்கால் பகுதியிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 5–ந் தேதிக்கு பிறகு மழை படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
பலத்த மழை எச்சரிக்கையால் டெல்டா விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். 

தஞ்சை மாவட்டத்தில் தொடர்மழையினால் தஞ்சை அருகே 62 ஆண்டுகால கிணறு பூமிக்குள் இறங்கியதால் பொதுமக்கள் பீதியுடன் காணப்படுகிறார்கள்.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தஞ்சையில் நேற்றுமுன்தினம் இரவு மழை தூறிக்கொண்டே இருந்தது. நேற்று காலை முதல் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மதியம் 12 மணி அளவில் லேசான தூறல் காணப்பட்டது. ஆனால் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையினால் தாழ்வான பகுதிகளில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. கடைமடை பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. வயல்களில் நெற்பயிர்கள் உள்ளதா? என தெரியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, திருவையாறு, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட 9 ஒன்றியங்களில் இதுவரை நேற்று முன்தினம் வரை 292 எக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருந்தது. ஆனால் இது நேற்று அதிகரித்து 328 எக்டேரானது. ஆனால் இந்த வயல்களில் தேங்கிய மழைநீர் வடியவில்லை. இதனால் இந்த பயிர்களில் தேங்கிய மழைநீர் வடியாததால் பயிர்கள் அழுகும் நிலை காணப்படுகிறது.

இது தவிர திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஒன்றியங்களில் மழைநீரில் தேங்கி பயிர்கள் அழுகியதன் மூலம் இதுவரை 64 எக்டேர் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. மேலும் மழைநீர் தேங்கிய பகுதிகளில் தொடர்ந்து வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஞானஒளி மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

கிணறு பூமிக்குள் இறங்கியது

தஞ்சையை அடுத்த குருங்குளம் மேற்கு ஊராட்சியில் உள்ளது மேட்டுப்பட்டி கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவில் 1953-54-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் ஆட்சிக்காலத்தில் கிராம குடிநீர் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கிணறு வெட்டப்பட்டது. சுமார் 60 அடி ஆழம் கொண்டதாக இந்த கிணறு இருந்தது. இந்த கிணற்று நீரை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த கிணறு பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்த கனமழை காரணமாக இந்த கிணறு பூமிக்குள் இறங்கியது. சுமார் 62 காலமாக இருந்த இந்த கிணறு திடீரென பூமிக்குள் இறங்கியதால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியில் காணப்படுகிறார்கள்.

மேலும் இந்த கிணறு சாலை ஓரத்தில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லவே பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகிறார்கள். எனவே இந்த கிணற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழைஅளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

தஞ்சாவூர் 1, திருவையாறு 14, பூதலூர் 4, திருக்காட்டுப்பள்ளி 7.2, கல்லணை 1.8, ஒரத்தநாடு 1.8, நெய்வாசல் தென்பாதி 9, கும்பகோணம் 12, பாபநாசம் 13, அய்யம்பேட்டை 11, திருவிடைமருதூர் 28, மஞ்சளாறு 31.6, அணைக்கரை 15.4, பட்டுக்கோட்டை 1. 

அதி ராம் பட் டி னம்,டிச.4:
அதி ராம் பட் டி னத் தில் நேற்று அதி காலை முதல் லேசான மழை இருந் தது. கடந்த 7 நாட் க ளுக்கு மேலாக மழை மற் றும் தூரல் இருந்து வரு கி றது.
நேற்று காலை மு தல் மதி யம் வரை மழை தூறல் இருந் தது அத னைத் தொடர்ந் தது வானம் மேக மூட் டத் து டன் காணப் பட் டது தொடர் மழை யால் உப் ப ளங் க ளில் மழை நீர் சூழ்ந் தது. இத னால் பகு தி யில் கரு வாடு உலர்த் தும் பணி கள் பாதிக் கப் பட் டுள் ளது.

பட் டுக் கோட்டை,டிச.4:
தமி ழக மக் கள் முன் னேற் றக் க ழக நிறு வ னத் த லை வர் ஜான் பாண் டி ய னின் 60வது பிறந் த நாள் விழாவை முன் னிட்டு பட் டுக் கோட்டை அரசு மருத் து வ ம னை யில் ரத் த தா னம் வழங் கும் நிகழ்ச்சி நடை பெற் றது.
தமி ழக மக் கள் முன் னேற் றக் க ழக தஞ்சை மாவட் டத் தலை வர் குரு மூர்த்தி தலை மை யில், நக ரத் த லை வர் கே.ராஜா, நகர செய லா ளர் ஜோதி மணி, நகர பொரு ளா ளர் ஆனந்த் முன் னிலை வகித் த னர். இதில் 60க்கும் மேற் பட் டோர் ரத் த தா னம் வழங் கி னர். தொடர்ந்து அனை வ ருக் கும் இனிப்பு வழங் கப் பட் டது.
நிகழ்ச் சி யில் சிறப்பு விருந் தி ன ராக அரசு மருத் து வ மனை தலைமை மருத் து வர் கள் பாஸ் க ரன், காந்தி மற் றும் தமி ழக மக் கள் முன் னேற் றக் க ழக ஒன் றிய இளை ஞ ரணி செய லா ளர் முரு கை யன், அதி ராம் பட் டி னம் நகர செய லா ளர் வைத் தீஸ் வ ரன், மகேஸ் வ ரன், இளை ஞ ரணி அந் தோ ணி சாமி, குழந் தை சேசு, அதி ராம் பட் டி னம் முத் துக் கு மார், மாண வ ரணி மோகன் பி ரபு, ஜான் பீட் டர், ரவி ராஜா உள் பட ஏரா ள மா னோர் கலந்து கொண் ட னர்.


சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் 2-ந் தேதி சராசரியாக 24 செ.மீ. மழை பெய்துள்ளது. செம்பரம்பாக்கத்தில் 47 செ.மீ., பொன்னேரியில் 31 செ.மீ., பூந்தமல்லியில் 33 செ.மீ., செங்குன்றத்தில் 32 செ.மீ., என்ற அளவில் மழை பெய்துள்ளது. அம்பத்தூர், பொன்னேரி, மதுரவாயல், திருவொற்றியூர் மற்றும் மாதவரம் பகுதிகளில் பல இடங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 15 இடங்களில் சாலைப் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு சிறிய ஏரிகளில் உடைப்பும், மூன்று பொதுப்பணித் துறை ஏரிகளில் உடைப்பும் ஏற்பட்டது. அவை சரி செய்யப்பட்டு வருகின்றன. 530 நபர்கள் நேற்று இரவில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 35 வீரர்கள் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும், மூன்று கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படை குழுக்களும், திருவள்ளூரில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாம்பரத்தில் 49 செ.மீ. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2-ந் தேதி சராசரியாக 34 செ.மீ., மழை பெய்துள்ளது. குறிப்பாக தாம்பரத்தில் 49 செ.மீ., திருக்கழுக்குன்றத்தில் 44 செ.மீ., செங்கல்பட்டில் 39 செ.மீ., ஸ்ரீபெரும்புதூரில் 37 செ.மீ., செய்யூரில் 37 செ.மீ., மகாபலிபுரத்தில் 33 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நந்திவரம் -கூடுவாஞ்சேரி பேரூராட்சி, வரதராஜபுரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், ஜி.எஸ்.டி. சாலை, பீர்க்கங்கரணை, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, ஆதனூர், படப்பை, பாக்குவான்சேரி, தண்டரை மற்றும் புதுக்குப்பம் ஆகிய பல பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது. 43 ஆயிரம் பேர்... 206 நிவாரண முகாம்களில் 43 ஆயிரத்து 697 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 ஆயிரத்து 519 மக்களுக்கு உணவு பொட்டலங்களும், அம்மா குடிநீர் பாட்டில்களும் வினியோகிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள், 650 காவல் துறையினரும், ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோரப்பட்டு ஏரி, கலவாக்கம் ஏரி, செங்கல்பட்டு வட்டத்தில் தென் மேல்பாக்கம் ஏரி மற்றும் குறும்பூர் ஏரி ஆகியவற்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, தாம்பரம் செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, தாம்பரம்-படப்பை-காஞ்சீபுரம் சாலை மற்றும் ஓரகடம்-சிங்கப்பெருமாள் கோயில் சாலை ஆகியவற்றில் ஏரிகளில் இருந்து உபரி நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 28 செ.மீ சென்னையில், 2-ந் தேதி 28 செ.மீ., மழை பெய்துள்ளது. அடையாறில் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசித்த 3 ஆயிரத்து 646 நபர்கள் ஏற்கெனவே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 80 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, அதில் 10 ஆயிரத்து 845 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 400 உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை வீரர்களுடன் கூடுதலாக, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 175 மருத்துவ முகாம்கள் மற்றும் 13 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாக 20 ஆயிரத்து 92 நபர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்துள்ள 423 பகுதிகளில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. படகுகளில் மீட்பு 436 பகுதிகளில் வெள்ள நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மோட்டார் பம்புகள், ஜே.சி.பி./பொக்லைன், அதிவேக நீர் உறிஞ்சும் எந்திரங்கள் ஆகியவற்றுடன், 49 தீயணைப்பு வாகனங்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மின்விநியோகம் நிறுத்தம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால், பெரும்பாக்கம், ராதாநகர், மெப்ஸ், சிறுசேரி, சோழிங்கநல்லூர், நங்கநல்லூர், தில்லை கங்கா நகர், ஆவடி, மதுரவாயல், செங்குன்றம், வியாசர்பாடி, அம்பத்தூர் ஆகிய இடங்களிலும் வெள்ளம் காரணமாக பல இடங்களில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கூடுதல் குழுக்கள் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை புறநகர் பகுதிகளில் மின்னூட்டிகளும், டிரான்ஸ்பார்மர்களும் பாதுகாப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெள்ள நீர் பாதுகாப்பான அளவிற்கு குறைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும். சென்னை நகரில் அனைத்து துணை மின் நிலையங்களும் பயன்பாட்டில் உள்ளன. அடையார், கோட்டூர்புரம் பகுதிகளில் உள்ள 3 கழிவு நீரேற்று நிலையங்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. ராணுவத்தில் 200 வீரர்கள் கொண்ட இரண்டு குழுக்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். பெங்களூருவிலிருந்து கூடுதலாக 4 குழுக்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதில், ஒரு குழு திருவள்ளூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு காவல் படையின் 8 பட்டாலியன்களை சேர்ந்த வீரர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை வீரர்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இம்மாவட்டத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ஜக்மோகன் சிங் ராஜு, சத்யகோபால், ஹர்மந்தர் சிங், ராமச்சந்திரன், கோபாலகிருஷ்ணன், கா.பாலச்சந்திரன், வீர சண்முக மணி ஆகியோரை கூடுதலாக தற்போது அனுப்பி வைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இதுவரை தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களைச் சார்ந்த 520 நபர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 15 குழுக்கள் மற்ற மாநிலங்களிலிருந்து அனுப்பி வைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையின் 6 குழுவினரும், கடலோர பாதுகாப்பு படையினைச் சார்ந்த 3 குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோட்டார் பொருத்தப்பட்ட 126 படகுகள், 74 சாதாரண படகுகள் என மொத்தம் 200 படகுகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், 50 படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட தயார் நிலையில் உள்ளன. இன்று பார்வை.. தேசிய கடலோரப் பாதுகாப்பு படையின் 2 ஹெலிகாப்டர்களும், இந்திய விமானப் படையின் 2 ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை 2-ந் தேதி பிற்பகல் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். மோசமான வானிலை காரணமாக இந்திய வான்படைக்கு சொந்தமான விமானத்தின் விமானிகள், தற்போது மீண்டும் மழை பொழிவதால் தற்போதுள்ள சூழ்நிலையில் ஹெலிகாப்டர் பறக்க இயலாது என்று தெரிவித்தனர். எனவே, ஜெயலலிதா சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் இன்று காலையில் பார்வையிடுவார். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பிரதமரும் வருகை? இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியும் இன்று சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடக் கூடும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

news by.oneindia


 முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தில் த.மு.மு.க கிளை சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய செயலாளர் வகாப் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வக்கில் தீன் முகம்மது முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிளை செயலாளர் தவ்லத் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் கடந்த 3 நாட்களும் தினமும் நூற்றுக்கணக்கானப் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 

படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை

 முத்துப்பேட்டை பகுதியில் தற்பொழுது வடக்கிழக்கு பருவ மழை பெய்து வருவதால் இப்பகுதியில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இரை தேடவும் இனப் பெருக்கத்துக்காகவும் குவிந்துள்ளது. இந்த நிலையில் பறவைகளை சமூக விரோதிகள் சிலர் உணவுக்காகவும் விற்னைக்காகவும் வேட்டையாடி வருகின்றனர். இதனை தடுக்க திருச்சி மண்டல வனப்பாதுகாவலர் கருணை பிரியா மற்றும் திருவாரூர் மாவட்ட வன அலுவலர் பார்த்திபன் ஆகியோர் உத்தரவுப்படி முத்துப்பேட்டை வன சரகர் அயூப்கான் தலைமையில் வனபாதுகாவாலர்கள் சிவநேசன், மாரிமுத்து, சின்னப்பன். வேட்டைத்தடுப்பு காவலர்கள் பாலசுப்பிரமணியன், நாகராஜன், செல்வராஜ், செல்வகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை கடந்த சில நாட்களாக இரவு, பகலில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொண்டியக்காடு பகுதியில் பறவைகள் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் தொண்டியக்காடு அளம் பகுதியில் சோதனையிட்டபோது தொண்டியக்காடு பகுதியை சேர்ந்த ஒருவர் வலைவிரித்து கூழைக்கிடா என்ற பறவையை பிடித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த கூழைக்கிடா பறவையை பறிமுதல் செய்தனர். பின்னர் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சுந்தரை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 30 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. இது குறித்து முத்துப்பேட்டை வன சரகர் அயூப்கான் கூறுகையில்: பறவைகளை பிடிப்பது கண்ணி மற்றும் வலை வைத்து வேட்டையாடி பிடிப்பது, விற்பது இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி குறைந்தபட்சம் 25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இது போன்ற குற்றங்களில் யாரும் ஈடுப்படுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை

தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையினால் ஒரே நாளில் 108 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. மேலும் 6 பசுமாடு, 13 வெள்ளாடுகளும் மழைக்கு பலியாகின.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில் தஞ்சையில் நேற்று முன்தினம் இரவு மழை தூறிக்கொண்டே இருந்தது. நள்ளிரவுக்குப்பின்னர் மழை இன்றி காணப்பட்டது. நேற்று காலை லேசான தூறல் காணப்பட்டது. அதன் பின்னர் மழை இன்றி காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறலுடன் மழை காணப்பட்டது.

108 வீடுகள் இடிந்தன

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திருக்காட்டுப்பள்ளி, அதிராம்பட்டினம், பாபநாசம், அய்யம்பேடடை, நெய்வாசல் தென்பாதி, வெட்டிக்காடு, ஈச்சன்விடுதி, ஒரத்தநாடு, மதுக்கூர், பேராவூரணி, குருங்குளம், பட்டுக்கோட்டை பகுதிகளில் பலத்தமழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழைக்கு ஒரே நாளில் மட்டும் 108 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இதில் 9 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. 99 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்தன. மேலும் 6 பசுமாடுகளும், 13 வெள்ளாடுகளும் மழைக்கு பலியாகின.

தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் இதுவரை 60 பசுமாடுகள் பலியாகி உள்ளன. 2 காளை மாடுகள், 2 எருமை மாடுகள், 28 கன்று குட்டிகள், 122 வெள்ளாடுகள், 3 செம்மறிஆடுகள் பலியாகி உள்ளன. மேலும் 55 வீடுகள் இடிந்து விழுந்து முழுவதும் சேதமடைந்துள்ளன. மேலும் 722 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளன.

ரெயில் நிலையம் வெறிச்சோடின

தஞ்சை வழியாக சென்னைக்கும், சென்னையில் இருந்து தஞ்சை வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டன. மேலும் நேற்று பகலில் தஞ்சை வழியாக சென்னைக்கு செல்லும் ரெயிலும் ரத்து செய்யப்பட்டன. மேலும் தஞ்சையில் இருந்து செல்லும் பயணிகள் ரெயிலும், தஞ்சை வழியாக செல்லும் பயணிகள் ரெயிலும் தாமதமாக வந்து சென்றன. இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் தஞ்சையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்களும் குறைந்த அளவே இயக்கப்பட்டன.

மழைஅளவு

தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அதிராம்பட்டினம் 28.7, கும்பகோணம் 8.6, பாபநாசம் 16.2, தஞ்சாவூர் 7, திருவையாறு 10, திருக்காட்டுப்பள்ளி 17.8, வல்லம் 9.5, கல்லணை 5.3, அய்யம்பேட்டை 20, திருவிடைமருதூர் 14, மஞ்சளாறு 14.6, பூதலூர் 10.8, வெட்டிக்காடு 20, ஈச்சன்விடுதி 26, ஒரத்தநாடு 25.8, மதுக்கூர் 51.8, பட்டுக்கோட்டை 32, பேராவூரணி 43, அணைக்கரை 15.2, குருங்குளம் 37.