skip to main |
skip to sidebar
Posted July 28, 2015
by
Adiraivanavil
in
Labels:
தமிழகம்
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், 11 வது குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார். அதனையடுத்து இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படவும் உள்ளது. முன்னாள் குடியரசுத்தலைவரான அப்துல் கலாம் அவர்கள் இன்று மாலை மேகலாயாவில் அமைந்துள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். அதனையடுத்து ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.