தஞ்சை மாவட்டம்அதிராம்பட்டினத்தில் ஒரு கட்டிடத்தில்சிக்கித்தவித்த 2 ஆஸ்திரேலிய ஆந்தைகள்மீட்கப்பட்டது.அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பட்டுக்கோட்டைமெயின் ரோட்டில் லாவண்யாதிருமணமண்டபம்அமைந்துள்ளது.இந்த மண்டபத்தின்உரிமையாளர் அகமது நேற்று காலை மண்டபத்தில் உள்ளஅலுவலகத்துக்குச் சென்றபோது அங்கு இரண்டு ஆஸ்திரேலியஆந்தைகள் இருப்பதைக்கண்டார்மேலும் அந்த ஆந்தைகள்வெளியில் செல்லமுடியாமல் சிக்கித் தவித்ததைக்கண்ட சமூகஆர்வலர்கள் மரைக்கா இத்ரிஷ் அகமது மற்றும் சாகுல் அவைகளை மீட்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல்கொடுத்தார்.இதையடுத்து வனத்துறையினர் அவற்றை கைப்பற்றிவேதாரண்யம் காட்டுப்பகுதியில் விடுவதற்காககொண்டுசென்றனர்.இதுபற்றி வன ஆர்வலர்கள் கூறுகையில்அதிராம்பட்டினம் பகுதி அலையாத்திக்காடுகள் உள்ளபகுதியாகும்.இந்த  அலையாத்திக்காடுகளுக்கு வருடம்தோரும்நவம்பர் மாதம் முதல் வெளிநாட்டுப்பறவைகள் வரத்துவங்கும்பின்னர் கோடைகாலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கம் அதிகமாகஆரம்பித்தவுடன் மீண்டும் சென்றுவிடும் இந்நிலையில் தற்போதுகுளிர்காலமாக உள்ளதால்  ஆஸ்திரேலியா,  ஸ்ரீலங்காமலேசியா,இந்தோனேசியா போன்ற நாடுகளைச்சேர்ந்த பறவைகள் நம்அலையாத்திக்காட்டுப்பகுதிக்குள்  உள்ளன.எனவேஅலையாத்திக்காடுகளை பராமரிக்கவும் காடுகள் அழியாமல்இருக்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்என்கின்றனர்.

 அதிராம்பட்டினம்.ஜன.20
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் வர்த்தக கடைகள் அடைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில்  மாணவர்கள் பொதுமக்கள் சிறுவர்கள் என்.ஆர்.காங்கிரஸ் தி.மு.. விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் வணிகர்கள் கூட்டமைப்பு வர்த்தக தொழில் சங்கங்களின் பேரமைப்பு. கார். வேன்உரிமையாளர்கள். ஒட்டுனர்கள் சங்கம். பெரிய மார்க்கெட். சின்ன மார்க்கெட் வியாபாரிகள் மாணவ பெற்றோரகள்; உள்ளிட்டோர் ஆதரவு அளித்தன. அனைவரும் பேருந்து நிலையத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகள். மற்றும் திமுக நகர செயலாளர் இராமகுணசேகரன். தில்லைநாதன். மரைக்கா இத்ரிஸ் அகமது. புருஷேத்தமன் ஆகியோர்   கலந்துகொண்டு தங்களது ஆதரவைதெரிவித்ததுடன் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் வரை போராடுவோம் என கோஷமிட்டனர். இதைபோல் அதிராம்பட்டினம் சுற்றிவுள்ள கிராமங்களிலும் நடைபெற்றன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அதிராம்பட்டினத்தில் கடைகள் அடைக்க பட்டது




















அதிராம்பட்டினம் புதுமனன தெருவை சேர்ந்த அ.வா..மு அபூபக்கர்ஸாஹிப் அவர்களின் மகனும் செ.செ. சேத்துப்பட்டடு சேக்அப்துல்காதர் அவர்களின் மருமகனும் ஹாஜி.A.V.M.முஹைதின்ஸாகிப் யு.ஏ.ஆ.முஹமதுமொய்தின் இவர்களின் சாகோதரரும் A.V.M. .அப்துல்ஸமது ஹம்மதுயூசப் அபூபக்கர் இவர்களின் தகப்பனரும் அஹமதுஅன்சாரி முஹம்மதுஜக்கி இவர்களின் மாமானருமாகிய ஹாஜி A.V.M.. முகம்மதுஇபுறஹிம் வஃபாத்தாகி விட்டார் அண்ணாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுதவுடன் தக்வாபள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

 தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழுவில் கட்சியின் பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்தை அடுத்து அதிராம்பட்டினம் திமுகவினர் அண்ணா உருவ படத்திற்க்கு மாலை அனிவித்தனர். இதனையடுத்து பேருந்து நிலையத்தில் வெடிகள் வெடித்து பொது மக்கள் அனைவருக்கும் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்சியில் அவைதலைவர் சாகுல்ஹமிது பெருளாளர் எஸ்.பி. கோடிமுதலி ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர்  மரைக்கா இத்ரிஸ் அகமது, அன்சர்கான், இன்பநாதன், ஜகபர்அலி, முத்துராமன், வரிசைமுகமது, செல்வராஜ், விரப்பன், நாகூரன், இராமநாதன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்,   




நமது பட்டுக்கோட்டை மண்ணைச் சேர்ந்தவரும் அதிராம்பட்டினம் தினமலர் நாளிதழ் நிருபர் மற்றும் ரஞ்சி மெடிக்கல் உரிமையாளருமான திரு.இல.சிவா அவர்கள் நடிப்பில் வெளியாகும் தலையாட்டி பொம்மை திரைப்படம் வருகிற 30-ந்தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது. அனைவரும் திரைக்குச்சென்று காணத்தவறாதீர்கள். இந்த திரைபடம் வெற்றி பெற அதிரைவானவில் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் 


 

 தினத்தந்தி நாளிதழில் வந்தது




அதிராம்பட்டினம், டிச.26 

தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினம் வண்டிப்பேட்டை அருகில் பிரசித்தி பெற்ற சபரிஐயப்பன் கோவில் உள்ளது.

 இக்கோவிலில் சபரிமலை போன்ற ஐயப்ப சாமி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்கள்; கன்னி பூஜை, பெரிய பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும்

. அதன்படி, இந்த சபரிஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் 1-ம் தேதி மண்டல பூஜை விழா தொடங்கி, ஐயப்ப பக்தர்களின் கூட்டு கன்னி பூஜை மற்றும் பஜனைகள் நடைபெற்றன.

 இந்தாண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

 இதையொட்டி, ஐயப்ப சாமிக்கு மகா அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கன்னி பூஜை, சக்தி அழைத்தல், கருப்பன் அழைத்தல், படி பூஜை நடந்தது. இதையடுத்து, கோவிலில் திருவிளக்குகளால் அலங்கறிக்கப்பட்டு பூஜைகள் மற்றும் பஜனைகள் விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 இதையொட்டி  அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐயப்பன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் அதிராம்பட்டினம் சுற்றிவுள்ள கன்னி சாமிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மற்றும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். 














 அதிராம்பட்டினம், டிச.24
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிரையில் அதிமுக கட்சியினர் அமைதி பேரணியை இன்று காலையில் நடத்தினர். இதனையடுத்து பேரணி அதிராம்பட்டினம்  பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி அரசு உயர்நிலைபள்ளி வரை சென்று திரும்பியது. இந்த பேரணியில் அதிராம்பட்டினம் நகர செயலாளர் பிச்சை, நகர துணைச்செயலாளர் தமீம் அன்சாரி, வார்டு கவுன்சிலர்கள், நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சிவக்குமார் வார்டு பேரூராட்சி கவுன்சிலர் உதயகுமார் மற்றும் அபுபக்கர் துரைபாஞ்சாலன் ஹாஜாபகுருதின் அப்துல்ரகுமான் அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



img-20161223-wa0003
அதிரையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான “அடுத்தது என்ன?” என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரும் 28-12-2016 அன்று காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது


இதனையடுத்து அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற மாணவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது


 இதில் மாணவர்கள் அடுத்தது என்ன படிக்கலாம்? 
கல்வி உதவி தொகைகள் பெறுவது எப்படி? 
நுழைவுத்தேர்வு என்ன? 

என்பது போன்ற மாணவர்களின் பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஆலிம் முஹம்மது சாலிஹ் கல்லூரியின் பேராசிரியரும், மாணவர்கள் நல ஆர்வலருமான பேரா.முஹம்மது ரபீக், மொழிப்பிரியன் அப்துல் ஹமீது, குழந்தை பேச்சாளர்.மஹ்மூத் அக்ரம், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்.செய்யது அகமது கபீர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளனர்


 தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எம்எம் ரேடியோ நிலையத்தை  நேற்று மாலை  மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை திறந்துவைத்தார்.

அதிரை எப்எம் 90.4 என்ற பெயரில் கடந்த 2011 வது வருடம் வானொலி அமைக்க விண்ணப்பிக்கப்பட்டு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட 6 அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கப்பெற்று தற்போது அதற்கான டவர் அமைக்கப்பட்டு பணி நிறைவடைந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை எப்எம் நிலையத்தை திறந்து வைத்தார். 

 இதில் நமது சமூகம் நமது நலன் என்ற அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,கடல்வளம், போக்குவரத்து, அரசு அறிவிப்புகள் உள்ளிட்ட சமூக முன்னேற்றத்திற்கு பயன்தரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் தினமும் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் பட்டுக்கோட்டை ,மதுக்கூர்,  முத்துப்பேட்டை,அதிராம்பட்டினம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் வசிக்கும் சுமார் 2.50 லட்சம் மக்கள் இந்த சமூக பண்பலை வானொலி அதிரை எப்எம் 90.4 மூலம் பயன்பெருவர். 

 இதன் துவக்க விழா அதிரை எப்எம் நிர்வாகத் தலைவர் தாஜீதீன் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாத்துரை துவக்கிவைத்து பேசுகையில் 

கல்வி பொருளாமாரம் மருத்துவம் வேலைவாய்ப்பு விவசாயம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் உள்ள பயனுள்ள கருத்துக்கள் இந்த சமூக பண்பலை மூலம் வெளியிடப்படும் இந்த கருத்துக்களை பொதுமக்கள் மட்டுமல்லாமல் குறிப்பாக மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் சமூக பயன்பெறும் வகையில் உள்ள இந்த எப்எம் இந்தப் பகுதியிளைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் ஒரு பெரிய வாய்ப்பு இந்த வாய்ப்பை இப்பகுதி மக்களுக்கு தந்த எப்எம் நிர்வாகத்தலைவர் தாஜிதின் மற்றும் நிர்வாகிகளையும் பாரட்டுகிறேன் என்று பேசினார்.

 இதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்புக்குழு தலைவர் பேராசிரியர்  செய்யது அகமது கபீர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்புக்குழுவினர் செய்தனர்.