அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கிழக்கேன் மீன்கள் வரத்து அதிகரிப்பு
Posted July 01, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கிழக்கேன் மீன்கள் மீனவர் வலையில் அதிகம் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கிழக்கேன் மீன்கள் தற்போது மீனவர்கள் வலையில் அதிகம் அகப்படுகின்றன. தஞ்சை கடற்பகுதியான அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் புதுப்பட்டினம் மல்லிப்பட்டினம் மற்றும் அண்ணாநகர் புதுத்தெரு வரையிலான கடற்பகுதியில் பிடிப்படுகின்றன இதில் தற்போது கிழக்கேன் அதிக அளவில் கிடைக்கின்றன. இது பொதுவாக மழைகாலங்களில் தான் கிடைக்கும். தற்போது மழை பெய்து வருவதால்; இந்தவகை மீன்கள் உற்பத்தியாகி மீனவர்கள் வலையில் அதிகம் பிடிபடுகின்றன. இதனையடுத்து இந்த மீன்;கள் அதிராம்பட்டினம் மார்கெட்டில் கிலோ ரூ-150 முதல் ரூ180 வரை விற்ப்பனையாகிறது விலை குறைவாக உள்ளதால் பொதுமக்கள் வாங்கிசெல்கின்றனர்.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கிழக்கேன் மீன்கள் வரத்து அதிகரிப்பு”