அதிரையில் நள்ளிரவில் கொள்ளை - மூன்று கடைகள் உடைக்கப்பட்டன.
Posted July 27, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் (மெயின் ரோடு) காவல் நிலையம் அருகே கடைகள் வைத்து நடத்தி வருபவர்கள் மோகன்லால் (எலக்ட்ரிக்கடை) அஸரப்தீன் (துணிகடை) அப்துல்ரகுமான (மளிகை கடை) இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு கடைகளை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அதிராம்பட்டினத்தில் பயங்கரமான மழை பெய்தது. இந்த மழை பெய்த நேரத்தை பயன்படுத்தி பூட்டியிருந்த கடைக்குள் துணிகடையில் இருந்த 16 ஆயிரமும். மளிகை கடைக்குள் இருந்த 60 ஆயிரமும். எலக்ட்ரிக்கடைக்குள் இருந்த சாமான்களை திருடி சென்றுவிட்டனர். எப்பொழுதும் இன்று (26ந் தேதி) காலை வந்து கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைந்துக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் அப்துல்ரகுமான் புகார் கொடுத்தார். புகாரின் பேரி;ல் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் (பொறுப்பு) பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி.அரவிந்த்மேனனுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டனர். சம்பவம் நடந்த இடத்திற்கு கரிகாலன் என்ற பெயர் கொண்ட மோப்பநாய் வந்து கடைக்கும் கடைக்கும் அருகில் இருந்த இடத்திற்கும் கவ்வி ஓடியது. திருடி சென்றவர்களை போலிசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிராம்பட்டினத்தில் போலிசார் குவிக்கப்பட்டன. இந்த ஒரு வாரத்தில் அதிராம்பட்டினத்தில் தொடர் திருட்டு நடந்து வருகின்றன. இதனால் திருடர்கள் அதிராம்பட்டினத்தில் பதுங்கி இருக்கலாம் என பரப்பாக பேசப்படுகின்றன. இந்த தொடர் திருட்டில் யார் சம்பந்த பட்டவர்கள் இந்த திருட்டை இவ்வளவு துணிச்சலாக யார் செய்திருக்கலாம். குடைகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளன. மின்சாரம் தடைப்பட்டதால் கேமரா ஓடவில்லையா, இவ்வாறு பல்வேறு கோணங்களில் போலிசார் திருடர்களை தேடி வருகின்றனர்.
0 comment(s) to... “அதிரையில் நள்ளிரவில் கொள்ளை - மூன்று கடைகள் உடைக்கப்பட்டன.”