தஞ்சை மாவட்டம்அதிராம்பட்டினத்தில் ஒரு கட்டிடத்தில்சிக்கித்தவித்த 2 ஆஸ்திரேலிய ஆந்தைகள்மீட்கப்பட்டது.அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பட்டுக்கோட்டைமெயின் ரோட்டில் லாவண்யாதிருமணமண்டபம்அமைந்துள்ளது.இந்த மண்டபத்தின்உரிமையாளர் அகமது நேற்று காலை மண்டபத்தில் உள்ளஅலுவலகத்துக்குச் சென்றபோது அங்கு இரண்டு ஆஸ்திரேலியஆந்தைகள் இருப்பதைக்கண்டார்மேலும் அந்த ஆந்தைகள்வெளியில் செல்லமுடியாமல் சிக்கித் தவித்ததைக்கண்ட சமூகஆர்வலர்கள் மரைக்கா இத்ரிஷ் அகமது மற்றும் சாகுல் அவைகளை மீட்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல்கொடுத்தார்.இதையடுத்து வனத்துறையினர் அவற்றை கைப்பற்றிவேதாரண்யம் காட்டுப்பகுதியில் விடுவதற்காககொண்டுசென்றனர்.இதுபற்றி வன ஆர்வலர்கள் கூறுகையில்அதிராம்பட்டினம் பகுதி அலையாத்திக்காடுகள் உள்ளபகுதியாகும்.இந்த  அலையாத்திக்காடுகளுக்கு வருடம்தோரும்நவம்பர் மாதம் முதல் வெளிநாட்டுப்பறவைகள் வரத்துவங்கும்பின்னர் கோடைகாலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கம் அதிகமாகஆரம்பித்தவுடன் மீண்டும் சென்றுவிடும் இந்நிலையில் தற்போதுகுளிர்காலமாக உள்ளதால்  ஆஸ்திரேலியா,  ஸ்ரீலங்காமலேசியா,இந்தோனேசியா போன்ற நாடுகளைச்சேர்ந்த பறவைகள் நம்அலையாத்திக்காட்டுப்பகுதிக்குள்  உள்ளன.எனவேஅலையாத்திக்காடுகளை பராமரிக்கவும் காடுகள் அழியாமல்இருக்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்என்கின்றனர்.

 அதிராம்பட்டினம்.ஜன.20
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் வர்த்தக கடைகள் அடைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில்  மாணவர்கள் பொதுமக்கள் சிறுவர்கள் என்.ஆர்.காங்கிரஸ் தி.மு.. விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் வணிகர்கள் கூட்டமைப்பு வர்த்தக தொழில் சங்கங்களின் பேரமைப்பு. கார். வேன்உரிமையாளர்கள். ஒட்டுனர்கள் சங்கம். பெரிய மார்க்கெட். சின்ன மார்க்கெட் வியாபாரிகள் மாணவ பெற்றோரகள்; உள்ளிட்டோர் ஆதரவு அளித்தன. அனைவரும் பேருந்து நிலையத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகள். மற்றும் திமுக நகர செயலாளர் இராமகுணசேகரன். தில்லைநாதன். மரைக்கா இத்ரிஸ் அகமது. புருஷேத்தமன் ஆகியோர்   கலந்துகொண்டு தங்களது ஆதரவைதெரிவித்ததுடன் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் வரை போராடுவோம் என கோஷமிட்டனர். இதைபோல் அதிராம்பட்டினம் சுற்றிவுள்ள கிராமங்களிலும் நடைபெற்றன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அதிராம்பட்டினத்தில் கடைகள் அடைக்க பட்டது




















அதிராம்பட்டினம் புதுமனன தெருவை சேர்ந்த அ.வா..மு அபூபக்கர்ஸாஹிப் அவர்களின் மகனும் செ.செ. சேத்துப்பட்டடு சேக்அப்துல்காதர் அவர்களின் மருமகனும் ஹாஜி.A.V.M.முஹைதின்ஸாகிப் யு.ஏ.ஆ.முஹமதுமொய்தின் இவர்களின் சாகோதரரும் A.V.M. .அப்துல்ஸமது ஹம்மதுயூசப் அபூபக்கர் இவர்களின் தகப்பனரும் அஹமதுஅன்சாரி முஹம்மதுஜக்கி இவர்களின் மாமானருமாகிய ஹாஜி A.V.M.. முகம்மதுஇபுறஹிம் வஃபாத்தாகி விட்டார் அண்ணாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுதவுடன் தக்வாபள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

 தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழுவில் கட்சியின் பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்தை அடுத்து அதிராம்பட்டினம் திமுகவினர் அண்ணா உருவ படத்திற்க்கு மாலை அனிவித்தனர். இதனையடுத்து பேருந்து நிலையத்தில் வெடிகள் வெடித்து பொது மக்கள் அனைவருக்கும் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்சியில் அவைதலைவர் சாகுல்ஹமிது பெருளாளர் எஸ்.பி. கோடிமுதலி ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர்  மரைக்கா இத்ரிஸ் அகமது, அன்சர்கான், இன்பநாதன், ஜகபர்அலி, முத்துராமன், வரிசைமுகமது, செல்வராஜ், விரப்பன், நாகூரன், இராமநாதன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்,